districts

img

ஏறுமுகத்தில் பூண்டின் விலை!

தருமபுரி, நவ.30- வரத்து குறைந்து காணப் படுவதால், பூண்டின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவ தாக வியாபாரிகள் தெரி வித்துள்ளனர். தமிழ்நாடு உட்பட தென்னிந் தியாவில், பூண்டு குறைந்த அளவி லேயே பயிரிடப்படுகிறது. மராட்டியம், குஜராத், மத்தியபிர தேசம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட வடஇந்திய மாநிலங்களில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பூண்டு விவசாயம் செய்யப் படுகிறது. அங்கு சாகுபடி செய்யப்படும் பூண்டு நாடு முழுவ தும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. மேலும், வெளிநாடு களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. பூண்டு மருந்தாக வும், வாசனை பொருளாகவும் பயன்படுகிறது. பூண்டில் அதிகப்படியான வைட்டமின் சத்துக்களும், தாதுக்களும் மருத்துவ குணம் நிறைந்திருப்பதால் சமையலுக்கு முக் கிய உணவுப் பொருளாக பயன்படுத்தப்படுகிறது. தரும புரி காய்கறி மார்க்கெட்டிற்கு பூண்டு வரத்து குறைந்துள்ளது. கடந்த 2 மாதத்திற்கு முன்பு நாட்டு பூண்டு ரூ.180க்கு விற் பனை செய்யப்பட்டது. பெரிய பூண்டு ரூ.200க்கு விற்பனை  செய்யப்பட்டது. பல் பூண்டு ரூ.160க்கு விற்பனை செய் யப்பட்டது. தற்போது இரண்டு மாதத்திற்கு மேலாக பூண்டு விலை உச்சத்தை தொட்டு வருகிறது. வரத்து குறைவால் தருமபுரி உழவர் சந்தையில் கிலோ பூண்டு ரூ.238க்கும், வெளி மார்க்கெட்டில் ரூ.250க்கும் மேல் விற்பனை செய் யப்படுகிறது.