திருப்பூர், மார்ச் 5 - திருப்பூர் மாவட்டம் காங்கயம், வெள்ளகோவில் பகுதிகளில் ரேசன் அரிசி கடத்தல் பற்றி புகார் கொடுத் தவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து தலித் விடுதலை இயக்கத்தின் மாநிலத் தலைவர் ச.கருப் பையா வெள்ளியன்று காங்கயம் வட்டாட்சியர் மற்றும் காங்கயம் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவ லகங்களில் கொடுத்த புகார் மனுவில் கூறியுள்ளதாவது: தலித் விடுதலை இயக்கத்தின் மாநிலத் தலைவராக இருந்து வரும் நான், திருப்பூர் மாவட்டத்துக்கு உள்பட்ட காங்கயம், வெள்ளகோவில், மூலனூர் ஆகிய பகுதிகளில் நடந்து வரும் ரேசன் அரிசி கடத்தல் குறித்து, கடந்த மாதம் அரசு அதிகாரிகளுக்கு புகார் மனு கொடுத்திருந்தேன். இந்நிலையில், கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி ரேசன் அரிசி கடத்தல் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் வெள்ளகோவில் பகுதியில் நான் தங்கி இருக்கும் வீட்டிற்கு வந்து, அருகில் இருக்கும் வீட்டினரிடம் என்னைப் பற்றி விசாரித்துச் சென்றுள்ளார். இதன் பின்னர் இரண்டு தடவை அதே இடத்திற்கு ஆயுதங்களுடன் வந்து, என்னை கொலை செய்வதாகவும் பக்கத்து வீட்டினரிடம் தெரி வித்துச் சென்றுள்ளார். இதையடுத்து, கடந்த வியாழனன்று (மார்ச் 2) எனது அலைபேசி எண்ணுக்கு வந்த சம்பந்தப்பட்ட நபர், என்னிடம் ரேசன் அரிசி கடத்தல் தொடர்பான புகார் மனுவை திரும்பப் பெற வலியுறுத்தியும், இல்லையெனில் கொலை செய்வ தாகவும் மிரட்டியுள்ளார். ஆகவே, சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுப்ப தோடு, எனது உயிருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும், என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.