districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

வழிப்பறியில் ஈடுபட்டவர்  குண்டர் சட்டத்தில் கைது

திருப்பூர், அக். 24 -  திருப்பூர் மாநகரம் தாராபுரம் ரோடு, கே.செட்டிபாளை யம், ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க் எதிரே முரளிதரன் என்பவர்  கடந்த ஆகஸ்ட் 21 அன்று தனது இருசக்கர வாகனத்தில் வந்து  கொண்டிருந்தபோது எதிரே வந்த சிலர் அவரை தாக்கி இருசக் கர வாகனத்தை பறித்து சென்றனர். இது சம்பந்தமாக நல்லூர்  காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, வீரபாண்டி  கணபதிபாளையம் சாலையில் வசித்து வந்த திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் மேலபூத்தெருவைச் சேர்ந்த  யூசுப் முகமது ஹாஜி (19) என்பவரை கைது செய்து சிறை யில் அடைத்தனர். இவரை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் சிறை யில் அடைக்க திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரவீன்  குமார் அபிநவ் ஆணையிட்டார். இதையடுத்து, கோவை மத் திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள யூசுப் முகமது ஹாஜியை  ஓர் ஆண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க  கடந்த வெள்ளியன்று ஆணை வழங்கப்பட்டது என்று மாநகர  காவல்துறை தெரிவித்துள்ளது.

டிராபேக் விகிதம் மாற்றம்: ஏற்றுமதியாளர்கள் வரவேற்பு

திருப்பூர், அக். 24 – திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் கோரிக்கையைத் தொடர்ந்து பின்னலாடை ஏற்றுமதிக்கான டூட்டி டிராபேக் விகி தம் மாற்றப்பட்டுள்ளதற்கு வரவேற்பும், நன்றியும் தெரிவிக் கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி ஏற்றுமதியாளர் சங்க கௌரவத்  தலைவர் ஏ.சக்திவேல், தலைவர் கே.எம்.சுப்பிரமணியம் உள் ளிட்டோர் சென்னையில், டூட்டி டிராபேக் கமிட்டியை சந்தித்து  பின்னலாடைகளுக்கு உரிய டிராபேக் விகிதத்தை உயர்த்தி  அறிவிக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளனர். இதன் தொடர்ச் சியாக கடந்த அக்டோபர் 20ஆம் தேதி ஒன்றிய நிதியமைச் சகத்தின் கீழ் செயல்படும் வருவாய்த் துறை டிராபேக் விகி தத்தை மாற்றி அறிவித்துள்ளனர். மாற்றி அமைக்கப்பட்ட இந்த விகிதம் அக்டோபர் 30ஆம் தேதி முதல் அமலுக்கு வரு கிறது. இதன்படி டிராபேக் விகிதம் 0.7 சதவிகிதம் முதல் 1 சதவிகி தம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப் பிய ஒன்றிய நாடுகளில் மக்களின் வாங்கும் சக்தி குறைந்து,  உலகச் சந்தையில் சவாலான வர்த்தகச் சூழலை சந்தித்து  வரும் சிக்கலான நேரத்தில், இந்த டிராபேக் உயர்வு அறிவிக் கப்பட்டுள்ளது. இது திருப்பூரின் போட்டித் திறனை அதிகரிக்க  உதவும் என்று கே.எம்.சுப்பிரமணியம் கூறியிருக்கிறார்.

உடுமலை அனைகளின் நிலவரம்

திருமூர்த்தி அணை 
நீர்மட்டம்:35.53/60அடி 
நீர்வரத்து:742கனஅடி
வெளியேற்றம்:850கனஅடி

அமராவதி அணை
நீர்மட்டம்: 63.00/90அடி
நீர்வரத்து:391கனஅடி
வெளியேற்றம்:979கனஅடி

வால்பாறையில் 20 இடங்களில் குளிக்க தடை

கோவை, அக்.24- வால்பாறையில் 20 இடங்களில் குளிக்கவோ, சுயபடம் எடுக்கவோ கூடாது. மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.  கோவை மாவட்டம், வால்பாறைக்கு சுற்றுலா சென்ற 5 கல்லூரி மாணவர்கள் கடந்த 20ஆம் தேதியன்று ஆற்றில் மூழ்கி மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இந்நிலையில், ஆபத்தான ஆறு மற்றும் நீர்நிலைப் பகுதிகளில் குளிப்பது, புகைப்படங்கள் மற்றும் சுயபடங்கள் (Selfie) எடுப்பதை குழந்தைகள், சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் முற்றிலும் தவிர்த்திட வேண்டும். சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அஜாக்கிரதையாக இருப்பதினால், பல நேரங்களில் நீர்நிலைகளில் அடித்து சென்று உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பாக அமைந்துவிடுகிறது.  இதுகுறித்து பொதுமக்களுக்கு வனத்துறை மற்றும் வால்பாறை நகராட்சி மூலம் வால்பாறை, அதை சுற்றியுள்ள ஆபத்தான ஆறு மற்றும் நீர்நிலைகளான நீர்வீழ்ச்சி எஸ்டேட் நதி, கருமலை எரச்சை பாறை, கூலங்கல் ஆறு, சோலையார் வளைவு, ஸ்டான்மோர் நதி, கெஜமுடியில் கூடுதோரை, வெள்ளைமலை சுரங்கப்பாதை, கெஜமுடி சுரங்கப்பாதை, சக்தி எஸ்டேட் தங்கவேல் ஆறு, தாளனார் நீர்வீழ்ச்சி, காதம்பரை அணை, மேல் ஆழியாறு அணை, காதம்பரை 501 சுரங்கப்பாதை, சந்தன அணை, சோலையார் அணை முன்பக்க ஆறு, சின்னக்கல்லார், நல்லமுடி பூஞ்சோலை பள்ளத்தாக்கு, வாட்டர்ஃபால்ஸ், எஸ்டேட்டில் புலி பள்ளத்தாக்கு, அனலி நீர்வீழ்ச்சி, மனாம்பள்ளியில் தங்கவேல் ஆறு ஆகிய 20 இடங்களில் அபாய எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளது.  எனவே, இப்பகுதிகளுக்கு அருகில் செல்ல வேண்டாம். இந்த ஆற்றுப்பகுதி மிகவும் ஆழமானதாகவும், ஆபத்தானதாகவும் மற்றும் சுழல்கள் நிறைந்த பகுதியாக உள்ளதால் இப்பகுதியில் சென்று குளிக்கவோ, புகைப்படம் எடுக்கவோ அனுமதி இல்லை. மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி எச்சரித்துள்ளார்.

காரிமங்கலம் கொள்ளை வழக்கு: மேலும் 3 பேர் கைது

தருமபுரி, அக்.24- கடந்த செப்.28 ஆம் தேதியன்று கர் நாடகாவில் இருந்து கோவைக்கு நகை கள் வாங்கிச் சென்ற பிரசன்னா என்ப வரை பின்தொடர்ந்து வந்த கொள்ளை  கும்பல், காரிமங்கலம் அடுத்த பூலாப் பட்டி அருகே, வழிமறித்து கடுமையாக  தாக்கி காருடன் 6 கிலோ தங்க நகைகள்  மற்றும் பணம் ரூ.60 லட்சத்தை கொள் ளையடித்து சென்றனர். இச்சம்பவம்  தொடர்பாக 10 தனிப்படைகள் அமைக் கப்பட்டன. இந்நிலையில் சென்னையில் பதுங் கியிருந்த தங்க நகை கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிட மிருந்து கடத்தப்பட்ட 6 கிலோ தங்க நகைகள், ரூ.19 லட்சத்து 50 ஆயிரம் மற்றும் 4 கார்கள், 8 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்து, 9 பேரை  கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இதில் தொடர்புடையவர்களை  போலீசார் தேடி வந்த நிலையில், ஒசூர்  அருகே பதுங்கியிருந்த ஆசிப் (32),  விஷ்னு (27), அக்க்ஷய் சோனு (22) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.  தலைமறைவாக உள்ள 3 பேரை போலீ சார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

இன்று மின்தடை

சேலம், அக்.24- அஸ்தம்பட்டி துணை மின் நிலையத்தில் புதனன்று  (இன்று) மாதாந்திர பராம ரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அஸ்தம் பட்டி, காந்தி ரோடு, வின் சென்ட், மரவனேரி, ராமநாத புரம், கன்னங்குறிச்சி, புது ஏரி, ஹவுசிங் போர்டு, கொல் லப்பட்டி, கோரிமேடு, ராம கிருஷ்ணா சாலை, அழகா புரம், ராஜாராம் நகர், சங்கர் நகர், கம்பர் தெரு, பாரதி  நகர், நகரமலை அடிவாரம், ஏற்காடு உள்ளிட்ட பகுதி களில் புதனன்று காலை 9  மணி முதல் மதியம் 2 மணி  வரை மின்விநியோகம் இருக் காது.