திருப்பூர், மார்ச் 12 - திருப்பூர் மாநகராட்சி இடுவம்பாளையம் பகுதியில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வதந் தியை பரப்பி சிலர் தடுக்க முயற்சிக்கின்ற னர். இதற்கு எதிராக வெகுண்டு எழுந்த அப்ப குதி பொதுமக்கள் அந்த இடத்தில் கண்டன முழக்கம் எழுப்பி, மருத்துவமனையை கட்ட வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாநகராட்சி 40-ஆவது வார்டு இடுவம்பாளையம் விநாயகாபுரம் பகுதி யில் புதிதாக ஆரம்ப சுகாதார நிலையம் கட்டு வதற்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 7ஆம் தேதி பூமி பூஜை போடப்பட்டது. ஆரம்ப சுகா தார நிலையம் அமைய உள்ள இடத்திற்கு பின் புறம் இரண்டு வீதிகளில் வசிக்கும் மக்கள், தங் கள் குடியிருப்புக்கு பாதை வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மனு அளித்த னர். அதன்படி மாநகராட்சி நிர்வாகம் ஆரம்ப சுகாதார நிலையத்தின் வரைபடத்தில் சிறு மாறுதல் செய்து, இரண்டு வீதிகளுக்கும் தலா 10 அடி அகல வழித்தடம் விடவும் முடிவு செய் தனர். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் சிலர், இங்கு ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்தால் சுகாதார சீர்கேடு ஏற்படும் என்று தவறான முறையில் வதந்தியை பரப்பியுள் ளனர். குறிப்பாக அதிமுக, பாரதிய ஜனதா கட் சியைச் சேர்ந்தவர்கள், மருத்துவமனை கட்டு வதற்கு முடிவு செய்துள்ள இடத்தில் இர வோடு இரவாக கற்களை நட்டு வைத்துள்ள னர். இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள் ளிட்ட இந்தியா அணியை சேர்ந்த கட்சி நிர் வாகிகள் இதுகுறித்து கலந்த ஆலோசனை செய்தனர். ஆரம்ப சுகாதார நிலையம் அமைய வுள்ள இடத்தில், வதந்தியை பரப்புவோ ருக்கு எதிராக, உண்மை நிலையை விளக்கி பதாகையை கட்டி வைத்துள்ளனர்.அத்துடன் செவ்வாயன்று அப்பகுதி பொதுமக்கள் பெருந்திரளானோர் அந்த இடத்தில் திரண்ட னர். 40 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் சுபத்ரா தேவி, திமுக அமைப்புசாரா ஓட்டு நர்கள் சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் ஆனந்தன், திமுக செயலாளர் சீனிவாசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட் டக்குழு உறுப்பினரும், இடுவாய் ஊராட்சி மன்ற தலைவருமான கே.கணேசன், இடுவம் பாளையம் மார்க்சிஸ்ட் கட்சி கிளைச் செயலா ளர் செல்வகுமார், அங்குலட்சுமி, பத்மநா பன், ஏசு, ராமசாமி, மதிமுக நிர்வாகி குமார் உள்பட பொதுமக்கள் அங்கு வந்திருந்த னர். சம்பவ இடத்திற்கு வந்த கிராம நிர்வாக அலுவலர் மற்றும் காவல் துறையினர் பிரச் சனை குறித்து கேட்டறிந்தனர். சிலர் வதந்தி பரப்பி மருத்துவமனை கட்டுவதை தடுக்க முயல்கின்றனர். இந்த இடத்தில் கட்டாயம் ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட வேண்டும். கடந்த 40 ஆண்டுகளில் இதே இடத்தில் ரேஷன் கடை, மேல்நிலை குடிநீர் தொட்டி, அங்கன்வாடி குழந்தைகள் மையம் ஆகிய அரசு கட்டிடங்கள் மற்றும் விநாயகர் கோயில் கட்டப்பட்டுள்ளது. அரசு நத்தம் புறம்போக்கு இடத்தில் மருத்துவமனை கட்டுவது இப்பகு தியில் உள்ள மக்களுக்கு அத்தியாவசிய தேவையாகும். இந்த வட்டாரத்தில் சுண்ட மேடு மற்றும் குளத்துக்கரை பகுதியில் சுமார் 6 கிலோ மட்டர் தூரத்தில் தான் ஆரம்ப சுகா தார நிலையங்கள் செயல்படுகின்றன. தற் போது இந்த இடத்தில் 10 படுக்கை வசதியு டன் சுகாதார நிலையம் கட்டப்படுகிறது. எந்தவித நியாயமான காரணமும் இல்லாமல் அதிமுக பாஜகவை சேர்ந்த சிலர் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் இதைத் தடுக்க முயல்கின்றனர் என்று கூறினர். மேலும் பொதுமக்கள், வதந்தியை பரப்பி மருத்துவம னையை தடுப்பதற்கு கண்டனம் தெரிவித் தும், கட்டாயம் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்றும் முழக்கங்கள் எழுப்பினர். ஏற்கனவே பூமி பூஜை போடப்பட்ட நிலை யில், கூடிய விரைவில் அங்கு கட்டுமானப் பணி தொடங்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தினர்.