districts

img

பாலக்கோடு ஏரிகளிலிருந்து இரவு, பகலாக மணல் கடத்தல் அதிகாரிகளின் அலட்சியமே காரணம்: மக்கள் குற்றச்சாட்டு

தருமபுரி, ஜன.2- பாலக்கோடு ஏரிகளிலிருந்து இரவு, பகலாக மண் கடத்தல் சம் பவம் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதற்கு, அதிகாரிகளின் அலட் சியமே காரணம் என அப்பகுதி பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ள னர். தருமபுரி மாவட்டம், பாலக் கோடு வட்டத்தில் உள்ள ஏரிகளில் இருந்து நெரம்பு மண், ஆறுகளில் இருந்து மணல் ஆகியவை கடத் தும் சம்பவம் நாளுக்குநாள் அதிக ரித்து வருகிறது. குறிப்பாக, இரவு நேரங்களில் நொம்பு மண் மற்றும் மணல் கொள்ளை நடைபெற்று வரு கிறது. இதனால் நிலத்தடி நீர் மட் டம் வெகு வேகமாக குறைந்து வரு கிறது. விரைவில் பாலக்கோடு சுற்று  வட்டார பகுதியில் தண்ணீர் பஞ்சம்  ஏற்படும் சூழல் உள்ளது. மேலும், தனிநபர்களின் வருமானத்திற்காக அரசுக்கு வருவாய் இழப்பும் ஏற் பட்டு வருகின்றன. பாலக்கோடு ஒன் றியத்தில் உள்ள பல்வேறு ஏரிகளி லும் அனுமதியின்றி சட்டவிரோத மான முறையில் பொக்லைன் எந்தி ரம், டிப்பர் லாரிகள் மூலம் மண்,  மணல் அள்ளப்பட்டு வருவது குறித்து விவசாயிகளும் பொது மக்களும் கேள்வி எழுப்பினால்,  “நாங்கள் வருவாய்த்துறையின ரின் அனுமதி பெற்றுதான் மண்  அள்ளுகிறோம்” என்று கூறுகின்ற னர். இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கேட்டால், “எங்க ளுக்கு எதுவும் தெரியாது” என நழுவி விடுகின்றனர். இரவு, பகலாக மண் கடத்தப் பட்டு வருவது குறித்து பொதுமக் கள் புகாரளித்தும் வருவாய்த்துறை அதிகாரிகள் கண்காணிக்காதது அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் இது குறித்து உரிய கவனம் செலுத்தி,  இயற்கை வள கொள்ளையை தடுத்த நிறுத்த வேண்டும். மேலும், இதற்கு உடந்தையாக உள்ள அதி காரிகள் மீதும், இதனை கண்கா ணிக்காத அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.