சேலம், அக்.1- சேலம் மாநகர பகுதியில் குடிநீர் உடைப்பை சரி செய் யாத மாநகராட்சி நிர்வாகத்தின் செயலால், அப்பகுதி பொது மக்கள், கடந்த ஒரு மாதமாக குடிநீர் கிடைக்காமல் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்ற னர். சேலம் மாநகராட்சி, 28 ஆவது வார்டுக்குட்பட்ட செவ் வாய்ப்பேட்டை, காளியம்மன் கோவில் பிரதான சாலை பகுதி யில் கடந்த 28 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்பட வில்லை. இதுகுறித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் கேட்டபோது, பாதாள சாக்கடை திட்டம் நடைபெறும் போது குடிநீர் குழாய் சேதமடைந்துவிட்டது. எனவே, குடிநீர் விநி யோகம் நிறுத்தப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் பொறுப் பற்ற பதில்களை கூறி வருகின்றன. இந்நிலையில், சேலத்தின் வணிக மையத்தின் இதயமாக இருந்து வரக்கூடிய அரிசி பஜா ரில் ஏற்பட்ட குடிநீர் குழாய் உடைப்பு தான், இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இத்தகைய உடைப்பு ஒரு மாத கால மாக சரி செய்யப்படாமல் இருப்பதால், பெரிய பள்ளத்தில் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகளுக்கு பெரும் அச்சுறுத்த லாக உள்ளது. எனவே, உடனடியாக குழாய் உடைப்பை சரி செய்து, விரைந்து குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ள னர்.