உடுமலை, செப்.5- ஓய்வூதியர்களுக்கு தர வேண்டிய மருத்துவ செலவுத் தொகையைத் தராமல் காலதாமதம் செய்யும் இன்சூரன்ஸ் நிறுவனத்தை கண்டித்து ஓய்வூதியர்கள் செவ்வாயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உடுமலை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவ லகத்திற்கு முன்பு ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உடுமலை வட்டத்தலை வர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தல், மின்வாரியத்தில் ஓய்வு பெற்ற ஊழியர் களுக்கு யூனைடெட் இந்திய இன்சூரன்ஸ் கம்பெனி மூலம் மருத்துவ காப்பீடு செய்யப்பட்டு உள்ளது. இன்சூரன்ஸ் நிறுவ னம் ஓய்வூதியர்களுக்கு தர வேண்டிய மருத்துவ செலவுத் தொகையைத் தருவதில் மெத்தனப்போக்கை கடைப்பிடிப் பதை கண்டித்து முழக்கங்கள் எழுப்பபட்டது. இதில் கிளைச் செயலாளர் கிருஷ்ணகுமார் உட்பட திராளனோர் கலந்து கொண்டனர்.