தாராபுரம், டிச.12- புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியதிட்டத்தை மீண்டும் நடை முறைப்படுத்த கோரி திருப்பூர், தாராபுரம், உடுமலை ஆகிய பகுதிகளில் கண்ணில் கருப்பு பட்டை கட்டி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூ தியர் சங்கத்தின் சார்பில் ஓய்வூதியர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண் ணில் கருப்பு பட்டை அணிந்து தாராபுரம் வட் டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டப் பொருளாளர் கி.மேகவர்ணன் தலைமை வகித்தார். மாவட்ட துணை;த தலைவர்கள் இரா.நடராஜன், பெ.மணிவேலு, வட்டக் கிளை தலைவர் எம்.பீர்ஜாபர், செயலாளர் பட்டு. கே.ராஜேந்திரன், காங்கயம் வட்டக் கிளை தலைவர் டி.தங்கமாரியப்பன், செய லாளர் பி.ராஜன் ஆகியோர் முன்னிலை வகித் தனர். ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக முதல் வர் சட்டமன்ற தேர்தலின்போது அரசு ஊழி யர், ஆசிரியர், ஓய்வூதியர், சத்துணவு, அங் கன்வாடி ஊழியர்களுக்கு அளிக்கப்பட்ட முக் கியமான வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியதிட்டத்தை மீண் டும் நடைமுறைப்படுத்தவேண்டும். 70 வயதை கடந்த அனைத்து ஓய்வூதியர்களுக் கும் கூடுதல் ஓய்வூதியம் 10 சதவீதம் வழங் கிட வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 7850/- வழங்கப்படாத சத்துணவு, அங்கன் வாடி, வருவாய் கிராம ஊழியர்கள், ஊராட்சி செயலாளர்கள், பட்டுவளர்ச்சிதுறை தற்கா லிக ஊழியர்கள் மற்றும் வனத்துறை பணி யாளர்கள் உள்ளிட்ட அனைவரும் ரூ.7850/- வழங்கவேண்டும். ஓய்வூதியர்களுக்கு வழங் கப்படும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை ஆய்வு செய்து அதில் உள்ள குறைகளை களைய நடவடிக்கை எடுக்கவேண்டும் உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்கள் எழுப்பி ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஓய்வூதி யர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கருப்பு பட்டை கட்டி ஓய்வூதியர் சங் கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ் நாடு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜி.சண்முகம் தலைமை யில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநிலச் செயலாளர் நிசார் அஹமத் சிறப்புரை யாற்றினார். ஓய்வூதியர் சங்க வட்டக் கிளை நிர்வாகிகள் ஜி.நாகராஜ், எஸ்.பாலகிருஷ் ணன், ஆர்.பழனிசாமி, என்.பாஸ்கரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
உடுமலை
அதேபோல, அனைத்து துறை ஓய்வூ தியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சோ. பாலகிருஷ்ணன் தலைமையில் உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் பாலசந்திரமூர்த்தி, ஜெயபால்ராஜ், குணசேகரன், வட்டக்கிளை நிர்வாகிகள் தாசன், குணசேகரன், செளந்தர ராஜன் மற்றும் கருணாநிதி உட்பட திரளா னோர் கலந்து கொண்டார்கள்.