districts

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளிகளில் தேர்ச்சி சதவிகிதம் குறைவு

திருப்பூர், ஜூன் 21- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளின் 10 மற்றும் 12 ஆம்  வகுப்புகளின் தேர்ச்சி விகிதம் சரிவு குறித்து  ஆய்வுக்குட்படுத்த வேண்டும் என பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கம் தெரிவித்துள் ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.சி.நடராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது, திங்களன்று 10  மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் துறை வாரியான தேர்ச்சி விகிதப்பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி 17 துறை களின் சார்பில் தேர்வெழுதியவர்களில் ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகள் 82.21 சதவிகி தம், பழங்குடியினர் நலத்துறை பள்ளிகள் 86.89 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது பிற துறைகளை ஒப்பிடுகையில் மிக வும் பின்தங்கிய நிலையில் தேர்ச்சி விகிதம் உள்ளது. குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் 10 மற்றும் 12 ஆம் தேர்ச்சி விகிதம் பெருமள வில் சரிந்துள்ளது.

தேர்வெழுதிய 5 பழங்குடி யினர் நலத்துறை பள்ளிகளில் 10 ஆம் வகுப் பில், ஆசனூர் 74 சதவிகிதம், பர்கூர் 80 சத விகிதம், கெத்தேசால் 90 சதவிகிதம், கொங் காடை 75 சதவிகிதம், தலமலை 44 சதவிகி தம் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஆச னூர் 68 சதவிகிதம், பர்கூர் 93 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தேர்ச்சி சரிவிற் கான காரணம் ஆசிரியர் காலிப் பணிடங் களை பூர்த்தி செய்யாததும், போதிய கண் காணிப்பின்மையுமே காரணமாகும். உதாரணமாக, பர்கூரில் அமைந்துள்ள மேல்நிலைப்பள்ளியில் 6 முதல் 12 வரை 418 மாணவ, மாணவியர் பயிலும் நிலையில், 418 பேருக்கும் ஒரே தமிழாசிரியர், ஒரே ஆங் கில ஆசிரியர் எனும் அவலம் நீடிக்கிறது.  இத்துறையிலுள்ள ஆசிரியர் காலிப்பணியி டங்கள் பல்லாண்டு காலமாக நிரப்பப்படா மல் உள்ளது. இதுகுறித்து பல முறை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றும் அரசு செவி சாய்க்கவில்லை. கல்வி என்பது எட்டாக்கனி யாக உள்ள இந்த பழங்குடியினரின் கல்வித் தரம் மிகவும் பின்தங்கியுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பார்த்தால் கூட பழங்குடியினரின் எழுத்தறிவு விகிதம் 54 சதவிகிதம் மிகவும் பின்தங்கியுள்ளது. ஆகவே, பழங்குடியினர் நலனில் அக் கறை காட்டும் தமிழக முதல்வர் இவ்விசயத் தில் தலையிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.