districts

img

கோவை வந்த துணை ராணுவப்படை

கோவை, மார்ச்.1- நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு  பாதுகாப்பு பணிகளுக்காக கோவை இரயில் நிலையம் வந்தடைந்த துணை  இராணுவத்தினரை, கோவை மாநகர தேர்தல் பிரிவு காவல்துறையினர் வரவேற்றனர். 

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறி விக்கப்பட உள்ள நிலையில், அரசி யல் கட்சியினர் கூட்டணி பேச்சு வார்த்தை, பிரச்சாரம் பொதுக்கூட்டம் எனப் பணிகளை துவங்கியுள்ளனர். இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் பணிக்காக கேரளாவில் இருந்து கோவை, திருப்பூர், மற்றும் நீலகிரி ஆகிய பகுதிகளுக்கு 3 கம்பெனி துணை இராணுவத்தினர் கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

கேரளாவில் இருந்து ரயில் மூலம் கோவை ரயில் நிலையம் வந்தடைந்த 276 துணை இராணுவ வீரர்களை கோவை மாநகர தேர்தல் பிரிவு போலீ ஸார் வரவேற்றனர். பின்னர் காவல் துறை பேருந்துகள் மூலம் துணை இராணுவத்தினர் தங்க ஏற்பாடு செய் யப்பட்டுள்ள பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்கள் பதற்ற மான பகுதிகளில் பாதுகாப்பு பணிக ளில் ஈடுபட உள்ளனர் என்பது குறிப் பிடத்தக்கது.