districts

img

பழைய ஓய்வூதியத்தை மீண்டும் அமல்படுத்திட வேண்டும் ஆர்.எம்.எஸ் ஓய்வூதியர் சங்க மாநாடு வலியுறுத்தல்

ஈரோடு, ஜூன் 6- புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட் டத்தை மீண்டும் அமுல் படுத்த வேண் டும் என அஞ்சல், ஆர்.எம்.எஸ்.ஓய்வூ தியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. அஞ்சல், ஆர்.எம்.எஸ். ஓய்வூதியர் சங்கத்தின் ஈரோடு கோட்ட மாநாடு கோட்டத் தலைவர் ஆர்.சுப்பிரமணி யன் தலைமையில் பெரியார் மன்றத் தில் நடைபெற்றது. மாநாட்டில், அகில இந்தியப் பொதுச்செயலாளர் கே.ராக வேந்திரன் சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க வ.பன்னீர் செல்வம், பி.எஸ்.என்.எல்.ஓய்வூதியர் சங்க பி.சின்னச்சாமி, போக்குவரத்து ஓய் வூதியர் சங்க ஜெகந்நாதன், பள்ளி, கல்லூரி ஓய்வூதியர் சங்க நிர்வாகி நட ராஜன், ஓய்வூதியர் ஒருங்கிணைப்பு குழு தலைவர் மணிபாரதி, அஞ்சல், ஆர்.எம்.எஸ் சங்க மாநிலத் துணைத் தலைவர் கே.ஆர்.கணேசன் மற்றும் அஞ்சல் ஊழியர் சங்கத்தலைவர்கள் வாழ்த்துரை வழங்கினர்.  புதிய நிர்வாகிகள் தேர்வு ஆர்.சுப்பிரமணியன் தலைவராக வும், என்.ராமசாமி செயலாளராகவும், வி.கே.பழனிவேல் பொருளாளரா கவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாநாட் டில் நூற்றுக்கும் மேற்பட்ட ஓய்வூதி யர் கள் கலந்து கொண்டனர். ஆர்.எம். எஸ்.ராஜகோபால் நன்றி கூறினார்.