பழைய பென்சன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏப்ரல் - 11 அன்று சென்னையில் நடைபெற உள்ள கோட்டை முற்றுகை போராட்டத்தை வெற்றிகரமாக்குவது குறித்த ஜாக்டோ - ஜியோ, மாவட்ட ஆலோசனை கூட்டம் தருமபுரியில் நடைபெற்றது. இதில், தருமபுரி மாவட்டத்தில் ஊழியர்கள் திரளாக பங்கேற்க செய்வது என முடிவெடுக்கப்பட்டது.