திருப்பூர், செப். 14 – நீதிமன்ற வழக்குத் தாக்கலில் ஈ பைலிங் முறையால் வழக்கறிஞர் களுக்கும், வழக்காடிகளுக்கும் மிகுந்த சிரமம் ஏற்படுவதாகவும், எனவே குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வரை பழைய முறையே தொடர வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் கள் புறக்கணிப்புப் போராட்டத்தை வியாழனன்று தொடங்கினர். திருப்பூர் பார் அசோசியேசன், திருப்பூர் அட்வகேட்ஸ் அசோசியே சன் மற்றும் திருப்பூர் மாவட்ட நீதி மன்ற வழக்கறிஞர்கள் சங்கம் ஆகிய மூன்று சங்கங்களின் கூட்டுப் பொதுக் குழுக் கூட்டம் திருப்பூர் ஒருங்கி ணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்கறிஞர்கள் சங்கத்தில் புதன்கிழமை நடைபெற்றது. திருப் பூர் பார் அசோசியேசன் தலைவர் எம். பழனிச்சாமி, அட்வகேட்ஸ் அசோசி யேசன் தலைவர் ஆர்.ரகுபதி, மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் எம்.சுந்தரேஸ்வரன் ஆகியோர் தலைமையிலும், இந்த மூன்று சங்கங்களின் செயலாளர்கள் எஸ்.பத்மநாபன், எஸ்.தர்மலிங்கம் மற்றும் பி.கலாநிதி ஆகியோர் முன் னிலையிலும் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானம் வருமாறு: எவ்வித மான உரிய கட்டமைப்பு வசதிகள் இன்றி அவசர கதியில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அனைத்து வழக்கு களும் ஈ பைலிங் எனப்படும் மின்னணு முறையில் தாக்கல் செய்யும் நடை முறை உத்தரவிடப்பட்டுள்ளது. இது வழக்கறிஞர்கள் மற்றும் வழக்காடி களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்ப டுத்தி உள்ளது. எனவே இதில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யும் வரை நீதிமன்றங்களில் தாக்கல் செய்யும் வழக்குகளின் முறையினை செப் டம்பர் 1ஆம் தேதிக்கு முன்பாக உள்ள முறையிலேயே தொடர வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி செப்டம்பர் 14, 15 மற்றும் 16 ஆகிய மூன்று நாட்கள் மட்டும் திருப்பூரில் உள்ள அனைத்து நீதிமன் றங்களின் பணிகளில் இருந்தும் விலகி இருப்பது என்று ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் வியாழக் கிழமை வழக்கறிஞர்கள் நீதிமன்றப் பணிகளில் பங்கேற்கவில்லை. ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத் தில் செயல்படக்கூடிய சுமார் 750 வழக்கறிஞர்கள் பணிகளைப் புறக் கணித்தனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி வியாழன், வெள்ளி ஆகிய இரண்டு நாட்களும் இந்த போராட்டம் தொடரும் என்றும் வழக் கறிஞர்கள் தரப்பில் தெரிவிக்கப் பட்டது.
நீதிபதி மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை:
அதேபோல் மூன்று வழக்கறி ஞர்கள் சங்கங்களின் கூட்டுப் பொதுக்குழுக் கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட மற்றொரு தீர்மானத் தில் திருப்பூர் முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதியும், இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தின் பொறுப்பு நீதிபதியுமான ஈ.பத்மா மீது உரிய விசாரணை நடத்தி சட்டப் பூர்வ நடவடிக்கை எடுக்கவும் வலி யுறுத்தப்பட்டுள்ளது. நீதிபதி ஈ.பத்மா திறந்த நீதிமன் றத்தில் வழக்கறிஞர்களிடமும், வழக் காடிகளிடும் நடந்து கொள்ளும் வித மும், அவரது சட்டவிரோதமான உத்த ரவுகளும், முறையற்ற சட்டவிரோத நடவடிக்கைகளும் நீதிமன்றத்தின் மாண்பையும், வழக்கறிஞர்கள் மற் றும் வழக்காடிகளின் கண்ணியத்தை யும் குறைக்கும் விதமாக உள்ளது. இது குறித்து அவரிடம் பல முறை நேரிலும், முதன்மை மாவட்ட நீதிப தியின் மூலமாகவும் முறையிட்டும் அவரது நடவடிக்கையில் எவ்வித மான மாற்றமும் இல்லாமல் தொடர் கிறது. எனவே வேறு வழியில்லாமல் அவரை திருப்பூரில் இருந்து வேறு நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யும் வரை அந்த நீதிபதியின் நீதி மன்றத்தை மட்டும் வியாழக்கிழமை முதல் தொடர்ந்து நீதிமன்ற பணிக ளில் இருந்து விலகி இருப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நீதி பதியின் மீது உரிய விசாரணை நடத்தி சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக் குமாறு முதன்மை மாவட்ட நீதிபதி மூலம் உயர்நீதிமன்றத் தலைமை நீதி பதி மற்றும் பொறுப்பு நீதிபதிகளி டம் முறையிடவும் தீர்மானித்துள் ளனர்.