சேலம், ஏப்.4- சேலம் மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பு முதி யவர் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரப் பரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே மல் லியகரை காடு பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன். இவர் தனது மனைவி மல் லிகா மற்றும் உறவினர் களுடன் திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலு வலகத்திற்கு வருகை புரிந் தார். இந்நிலையில், மனோகரன் தான் பையில் கொண்டு வந்திருந்த மண் ணெண்னை கேனை எடுத்து திடீரென தன் மீது ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்ற னர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியி லிருந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி நீரை ஊற்றி விசாரணை நடத்தி னர். இதில், தனது மூத்த மகன் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வீட்டை காலி செய்யச் சொல்லி என்னை அடித்து கீழே தள்ளி விட்டான். காலில் காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்புகையில், வீட்டை விட்டும் துரத்தி விட்டதால் வாழ்வதற்கு வேறு வழி யில்லாமல் நானும், எனது மனைவியும் நிற் கதியாய் உள்ளோம். ஆகவே, வயதான காலத்தில் எங்கே செல்வது என்று தெரி யாமல் உயிரை விடுவதே மேல் என நினைத்து ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து தற்கொலைக்கு முயன்றததாக அவர் தெரிவித்தார். இதையடுத்து, காவல்துறை யினர் முதியவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.