districts

img

வீட்டுமனை பட்டா கேட்டு ஆட்சியரிடம் மனு

தருமபுரி, மே 23- தருமபுரியை அடுத்த தடங்கம் பஞ் சாயத்துக்கு உட்பட்ட சவுளுபட்டி கிராமத் தைச் சேர்ந்த பொதுமக்கள் வீட்டுமனை பட்டா கோரி  மாவட்ட ஆட்சியர் ச.திவ்ய தர்சினியிடம்  மனு கொடுத்தனர்.  இம்மனுவில் கூறியிருப்பதாவது, தரும புரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம் தடங்கம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட அரசு புறம்போக்கு  மந்தைவெளி நிலத்தில் சுமார் 50 ஆண்டுக ளுக்கு மேலாக வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வருகிறோம். நாங்கள் மாவட்ட நிர் வாகத்திற்கு  அளிக்கப்பட்ட மனுவின் காரண மாக பட்டா வழங்க ஆவணம் செய்யப்பட் டது. இதன்படி கடந்த ஆண்டு எங்கள் வீட்டு  மனைகளை வட்டாட்சியர், வருவாய்  ஆய்வாளர் மற்றும் நில அளவையர் ஆகியோர் நில அளவீடு செய்து அரசு புறம்போக்கு மந்தைவெளி நிலத்தினை  வரைமுறை செய்து வீட்டுமனைப் பட்டா வழங்குவதாக கூறி சென்றனர். ஆனால்,  இதுவரை  எங்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க வில்லை. எனவே, தாங்கள் தலையிட்டு வீட்டு மனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தனர்.