districts

img

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துக

ஈரோடு, டிச. 30- புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூ திய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என ஓய்வூதி யர் அமைப்புகளின் ஒருங்கிணைப்புக்குழு வலியுறுத்தி யுள்ளது.  மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் அமைப்புகளின் ஒருங்கிணைப்புக்குழுவின் சார்பில் தேசிய ஓய்வூதியர் தின சிறப்பு கருத்தரங்கம் ஈரோடு வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் என்.மணிபாரதி தலைமை வகித்தார். செயலாளர் என்.ராம சாமி வரவேற்றார். அகில இந்திய செயற்குழு உறுப்பி னர் எஸ்.கருணாநிதி கருத்துரையாற்றினார். போக்குவ ரத்து ஓய்வூதியர் சங்கச்செயலாளர் எஸ்.ஜெயராமன், பி.எஸ்.என்.எல்-டி.ஓ.ட்டி ஓய்வூதியர் சங்கச்செயலாளர் என்.குப் புசாமி, அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கச்செயலாளர் வ.பன்னீர்செல்வம், ஓய்வு பெற்ற பள்ளிக்கல்லூரி ஆசிரி யர் சங்கத்தின் என்.நடராஜன் ஆகியோர் கருத்துரையாற் றினர்.  இதில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய  ஓய்வூதிய திட்டத்தை அமலாக்க வேண்டும். முடக்கப்பட்ட பஞ்சப்படி தவணைகளை உடனே வழங்க வேண்டும். 65 வயது முதல் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பிஎஸ் என்எல் ஓய்வூதியர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஓய்வூதிய மறுநிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், திரளானோர் பங்கேற் றனர்.