districts

img

காவி உடையில் திருவள்ளுவர் படம்: கடும் எதிர்ப்பை தொடர்ந்து புதிய படம்

உடுமலை, மார்ச் 15- உடுமலை அரசுப் பள்ளி  சுவரில் அரசு விதிகளுக்கு மாறாக காவி உடையில் திரு வள்ளுவர் படம் வரையப்பட் டதற்கு பல்வேறு அமைப்பு கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த தையடுத்து, அரசால் அங்கீக ரிக்கப்பட்ட படம் வரையப்பட்டது. உடுமலை நகராட்சி பகுதி தெய்வ சிகாமணி பட்டிணம்  என்ற பகுதியில் நகராட்சி ஆரம்ப பள்ளி செயல்பட்டு வருகி றது. இந்த பள்ளியின் சுற்றுச் சுவர் பராமரிப்பு வேலைகள் நடை பெற்ற நிலையில், சுவரில் தேச தலைவர்களின் படங்கள் வரை யப்பட்டுள்ளது. அதேபோல திருவள்ளுவர் படமும் வரை யப்பட்டு இருந்தது. தமிழ்நாடு அரசு வெளியிட்ட திருவள்ளு வர் படத்தை வரையாமல் காவி உடையுடன் கழுத்தில் மாலை  அணிவிக்கப்பட்டுள்ளது போன்ற ஒரு படம் வரையப்பட்டது.  இதற்கு பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை யடுத்து, அரசால் அங்கீகரிக்கப்பட்ட படம் வரையப்பட்டது.