கோவை, ஜன.4- கொரோனா பெருந்தொற்று காலத்தில் தான் பொது சுகாதாரத்தின் தேவை உணரப் பட்டது என மாவட்ட சுகாதாரப் பேரவை கூட் டத்தில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தனது உரையில் குறிப் பிட்டார். பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பில் மாவட்ட சுகா தாரப் பேரவை கூட்டம் கோவை மாவட்ட ஆட் சியர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் நடை பெற்றது. அப்போது ஆட்சியர் ஜி.எஸ்.சமீ ரன் பேசுகையில், சுகாதார கொள்கை வகுப்ப தில் குடிமக்களின் ஈடுபாட்டை மேலும் வலுப் படுத்தும் நோக்கில் மாவட்ட அளவில் சுகாதா ரப் பேரவை கூட்டங்கள் நடத்தப்பட்டு வரு கின்றன. கோவை மாவட்டம், 40 லட்சத்திற்கு மேல் மக்கள் தொகை கொண்டது. 50 சத விகிதம் மக்கள் நகரப்பகுதிகளும், 50 சதவிகி தம் மக்கள் கிராமப்பகுதிகளில் வசித்து வரு கின்றனர். இப்பேரவையில் வைக்கப்படும் கோரிக்கைகள் மாநில அளவிலான சுகாதா ரப் பேரவைக்கு அனுப்பி வைக்கப்படவுள் ளது. இதைத்தொடர்ந்து தமிழக முதல்வர் தலைமையில் நடைபெற உள்ள மாநில அள விலான பேரவை கூட்டத்தில் இக்கோரிக்கை களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வாய்ப்புகள் உண்டு. மாவட்டத்தில் மகப்பேறு இறப்பு விகிதம் குறைந்து வருகிறது. இருந்தபோதிலும் மகப் பேறு இறப்பு விகிதத்தை மேலும் குறைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கொரோனா பேரிடர் தொற்றுக்காலத்தில் இரண்டு அலைகளையும், தொற்றுப்பர வலை கட்டுப்படுத்தி, இறப்பு சதவிகிதத் தினை மிக குறைவாக குறைத்து, மக்கள் நலன் பாதுகாக்கப்பட்டுள்ளது.
இதற்கு மக்க ளின் ஒத்துழைப்பு மிக முக்கிய காரணமாக இருந்தது, என்றார். இதனைத்தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பேசுகையில், மாவட்டம் முந்தைய நிலையிலிருந்து, நிறைய கட்டமைப்பு வகையிலும், மக்கள் தொகை வளர்ச்சியிலும் நிறைய மாறுதலடைந் துள்ளது. மாவட்ட நிர்வாகம் கடந்த காலத்தில் கொரோன நோய்த்தொற்று பரவி வந்த காலத் தில் நோயாளிகளை கையாள்வதற்கு நிறைய சிரமங்களை சந்தித்தது. அத்தகைய சூழலில் தான் பொது சுகாதாரத்தின் அவசியம் உணரப் பட்டது. எனவே, அரசு தேவைகளை உணர்ந்து சுகாதார மையங்களை உருவாக்க வேண் டும். அப்படி உருவாக்குவதற்கு முந்தைய விதிமுறைகளிலிருந்து தளர்வுகளை ஏற்ப டுத்தி, குறிப்பாக மக்கள் தொகை மற்றும் தொலைவு ஆகியவற்றை திருத்தம் செய்து இந்த பேரவை தீர்மாணமாக நிறைவேற்றி அனுப்ப வேண்டும், என்றார். இக்கூட்டத்தில், மாநகராட்சி மேயர் கல் பனா ஆனந்தகுமார், சட்டமன்ற உறுப்பி னர்கள் ஏ.கே.செல்வராஜ், அம்மன் கே.அர்ச் சுணன், வி.பி.கந்தசாமி, டி.கே.அமுல்கந்த சாமி, மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப். கூடு தல் ஆட்சியர் அலர்மேல்மங்கை, கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா, இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரவீந்தி ரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.