districts

img

இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் குடியேறும் போராட்டம்

சேலம், நவ.25- வீட்டுமனை பட்டா உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற் றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப் போர் உரிமைகளுக்கான சங்கத்தி னர், திங்களன்று மேட்டூர் சார் ஆட்சி யர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். விண்ணப்பித்து தேர்வு செய் யப்பட்ட தகுதியான மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் இல வச வீட்டு மனை மற்றும் மனை பட்டா வழங்க வேண்டும். மகாத்மா  காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் நாலு மணி நேர வேலை செய்த மாற்றுத் திறனாளிகளுக்கு முழு ஊதியம் வழங்கிட வேண்டும். மேட்டூர் சார்  ஆட்சியர் தலைமையில் மாதம் ஒரு  முறையும் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் இரண்டு  மாதங்களுக்கு ஒரு முறையும் சிறப்பு குறைதீர் நாள் கூட்டம் நடத் தப்பட வேண்டும். மூன்று சக்கர மோட்டார் வாகனம் வைத்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடத்தி ஓட்டுநர் உரிமம் வழங்க வேண்டும். மேட்டூர் அரசு அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகம், வங்கி கள் போன்ற இடங்களில் மாற்றுத்தி றனாளிகள் எளிதில் சென்று வரக் கூடிய வகையில் சாய்தளம் அமைத் துக் கொடுக்க வேண்டும், கழிப்பிட  வசதி செய்து கொடுக்க வேண்டும். மேட்டூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலைய வணிக  வளாக கடைகளில் மாற்றுத்திறனா ளிகளுக்கு 5 சதமான கடைகளை ஒதுக்கி தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி குடி யேறும் போராட்டம் நடைபெற் றது. இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், மேற் கண்ட கோரிக்கைகளை வலியு றுத்தி, மேட்டூர் வட்டாட்சியர் மேட் டூர் சார் ஆட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் இடத்தில் பல  முறை மனு கொடுத்தும் எவ்வித  நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் மீது அரசு அமைப்பு கள் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை எனவே குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர். மேட்டூர் சார் ஆட்சியர் அலுவல கத்தில் நடைபெற்ற குடியேறும் போராட்டத்தை சிஐடியு மாவட்ட  துணைச்செயலாளர் சி.கருப்பண் ணன் துவக்கி வைத்தார், போராட் டத்திற்கு சங்கத்தின் மாநில மற்றும்  அகில இந்திய பொருளாளர் கே. ஆர்.சக்கரவர்த்தி தலைமை ஏற் றார். சங்க நிர்வாகிகள் எஸ்.அம் மாசி, ஜே. ஜான் பெர்னாண்டஸ் ஏ. பவுல்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர் பி.ஹரி கிருஷ்ணன், செயலாளர் எம். குணசேகரன், பொருளாளர் எம். கனகராஜ் மற்றும் நிர்வாகி கள் டி.நாகேந்திரன், எம், கோபால கிருஷ்ணன், என். நடராஜ், எம். மாதேஷ், எஸ். சங்கர் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதனைத்தொடர்ந்து, மேட்டூர்  வட்டாட்சியர், மேட்டூர் சார் ஆட்சி யர் ஆகியோர் போராட்டகளத் திற்கு வந்திருந்து மாற்றுத்திறனா ளிகளின் கோரிக்கைகள் மீது சங்கத்தின் தலைவர்களிடம் பேச்சு  வார்த்தை நடத்தினர்,  விண்ணப்பம் அளித்துள்ள அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் வருகின்ற வெள்ளியன்று மனை பட்டா வழங் கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் காத்திருப்பு போராட்டம் டிசம்பர் 2 ஆம் தேதிக்கு ஒத்திவைக் கப்பட்டது.