கோவை, ஜூன் 14- ரயில்வே, எல்ஐசி, என்டிசி உள்ளிட்ட பொதுச்சொத்துக்களை விற்பது மட்டும் தான் ஒன்றிய மோடி அரசிற்கு தெரியும். புதி தாக எதையும் இவர்களால் உருவாக்கத் தெரியாது என கோவை என்டிசி தொழிற் சங்க உண்ணாவிரத போராட்டத்தில் பி.ஆர். நடராஜன் எம்பி., குற்றம் சாட்டினார். ஒன்றிய ஜவுளித்துறைக்கு சொந்தமான என்டிசி ஆலைகளை இயக்கிட வலியு றுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார் பில் உண்ணாவிரத போராட்டம் கோவை யில் செவ்வாயன்று நடைபெற்றது. நாட்டில் உள்ள 23 என்டிசி ஆலைகளை முழுமை யாக இயக்கிட வேண்டும். தொழிலாளர் களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண் டும். இயக்கும் காலவரையில் முழுமை யான ஊதியம் வழங்கப்பட வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சேவ் என்டிசி அமைப்பு தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறது. அனைத்து தொழிற்சங் கங்களை உள்ளடக்கிய இந்த சேவ் என்டிசி அமைப்பின் சார்பில் கோவையில் உண்ணா விரத போராட்டம் நடைபெற்றது. நாடு முழு வதும் 9 மாநிலங்களில் போராட்டங்கள் நடத்துவது என சேவ் என்டிசி பஞ்சாலை தொழிற்சங்க கூட்டமைப்பு கடந்த 20 ஆம் தேதியன்று கொச்சியில் கூடி எடுத்த முடி வின் அடிப்படையில் இந்த போராட்டம் நடை பெற்றது. அதன்படி, கோவை சிவானந்த காலனி யில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத் தில், எச்எம்எஸ் தலைவர் டி.எம்.எஸ்.ராஜா மணி, சிஐடியு மாநில பொதுச்செயலாளர் சி.பத்மநாபன், ஏஐடியுசி மாநிலச் செயலா ளர் எம்.ஆறுமுகம் ஆகியோர் தலைமை வகித்தனர்.
உண்ணாவிரதத்தை துவக்கி வைத்து மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளு மன்ற உறுப்பினர் உரையாற்றுகையில், என்டிசி ஆலைகளை இயக்க வேண்டும் என தொடர்ந்து போராடி வருகிறோம். என்டிசி துறை செயலாளர், ஒன்றிய அமைச்சர் உள்ளிட்டவர்களிடம் நேரில் வலியுறுத்தியுள் ளோம். 50க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு கோரிக்கை மனுக்களை கொடுத்துள்ளோம். ஆனால், எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. ஒன்றிய மோடி அரசின் கொள்கையே தற் போது அனைத்தையும் தனியாருக்கு விற் பது என்பதாக உள்ளது. செவ்வாயன்று கோவையில் இருந்து சீரடிக்கு தனியார் ரயில் இயக்கப்படுகிறது. தண்டவாளங்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள், தொழில்நுட்ப வசதிகள் அனைத்தும் இந்திய பொதுத் துறை நிறுவனமான ரயில்வேயிக்கு சொந் தமானது. இத்தனை வசதிகள் அனைத்தை தையும் பெற்றுக்கொண்டு தனிநபர் ஒருவர் ரயிலை இயக்கி லாபத்தை மட்டும் கொண்டு செல்வார். இதுதான் ஒன்றிய மோடி அரசின் கொள்கை என்றாகிவிட்டது. இவர்களுக்கு விற்க மட்டும்தான் தெரியும் புதிதாக எதை யும் உருவாக்கத்தெரியாது.
இதுபோன்றே என்டிசி பஞ்சாலைக்கு சொந்தமான பல்லாயிரம் கோடி சொத்துக் களை விற்பதற்கு முடிவெடுத்துள்ளார்கள். என்டிசி பஞ்சாலைகளின் சொத்து இந்த உழைப்பாளி மக்களினால் உருவான சொத்து. இந்த சொத்துக்கள் முழுவதை யும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு தொழிலாளர்களின் வாழ்வாதா ரத்தோடு விளையாடிக்கொண்டிருக்கிறார் கள். 23 ஆலைகளை இயக்க வேண்டும். முழு சம்பளம் தரப்பட வேண்டும். ஆலை களை முழுமையாக இயக்குகிற வரையில் ஊதியம் வழங்க வேண்டும். உழைப்பாளி மக்கள் உருவாக்கி வைத்துள்ள இந்த என்டிசி பஞ்சாலைகளுக்கு சொந்தமான சொத்துக்களை பாதுகாக்க நாம் ஒன்று பட்டு போராடுவோம், என்றார். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடு பட்ட தலைவர்கள் கூறுகையில், இனி மேலும் என்டிசி ஆலைகளை முழுமையாக இயக்கவில்லை என்றால் அடுத்த கட்ட மாக பல்வேறு மாவட்டங்களில் தீவிரமான போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக தெரிவித்தனர். இந்த போராட்டத்தில் எல்பிஎப், சிஐடியு, எச்எம்எஸ், ஐஎன்டியுசி, ஏஐடியுசி, எம்எல்எப், என்டிஎல்எப் உள் ளிட்ட தொழிற்சங்கங்க தலைவர்கள் மற்றும் திரளானோர் பங்கேற்றனர்.