districts

img

பால் கொள்முதலில் பாதிப்பு இருக்காது: அமைச்சர் உறுதி

கோவை, ஜூன் 30- தொடர் நடவடிக்கையால் பால்  கொள்முதலில் பாதிப்பு இருக்காதென,  தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் உறுதியளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ஞாயிறன்று கோவையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த காலங்களில் பால்  கொள்முதலில் ஏற்பட்ட தொய்வு நிலை யை சரிசெய்ய பல்வேறு நடவடிக்கை கள் எடுக்கப்பட்டுள்ளன. பால் உற்பத் தியை ஊக்குவிக்க ரூ.3 ஊக்கத் தொகை, பாலின் தரத்தை அந்த இடத் திலேயே நிர்ணயம் செய்து விலை கொடுப்பது, கூட்டுறவு சங்கங்கள் மூலம் கடனுதவி, கடனுக்கான வட்டி குறைப்பு ஆகிய நடவடிக்கைகள் எடுக் கப்பட்டுள்ளன. ரூ.125 கோடிக்கு கடன்  வழங்கப்பட்டுள்ளது. கால்நடைக ளுக்கு வட்டியில்லா கடன் ஆகிய திட் டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந் தியா முழுவதும் மேய்ச்சல் நிலம் குறைந்து வருவதால், தீவனப் பயிர் களை பயிரிட திட்டமிடப்பட்டு வருகி றது. ஊறுகாய் புல் என சொல்லக் கூடிய தீவன பயிரை எங்கெங்கு அதிக மாக விளைச்சல் செய்ய முடியுமோ? அதை தேர்வு செய்து, மலிவு விலையில் விவசாயிகளுக்கு கொடுக்கும் திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. பால் விற்பனை 25 சதவிகிதம் அதி கரித்துள்ளது. நெய் போன்ற பொருட் கள் நீண்ட நாட்கள் தாங்கக்கூடிய குணம் உள்ளிட்டவைகள் பற்றி ஆராய்ந்து புதிய வியூகங்களை வகுத்து வருகிறோம். கிடாரி கன்று களை ஈனும் சினை ஊசி ஆரோக்கிய மான பழக்கம் அல்ல. தமிழ்நாட்டில் காளை கன்றுகளுக்கு உழவு, உணவு ஆகியவைகளுக்கு மிக தேவை உள் ளது. மேலை நாடுகளில் ஒரு மாடு 32 லிட் டர் தரும் நிலையில், நமது நாட்டில் 6 லிட் டர் தருவதை, 10 முதல் 15 வரை லிட் டராக உயர்த்தினால், விவசாயிகளுக்கு  பலன் தரும். 159 தரமான காளைகள்  வைத்துள்ளோம். கிடாரி கன்றுகளை ஈனும் சினை ஊசி 2021 வரை, 4 முதல்  5 லட்சம் வரை கொடுத்த நிலையில், கடந்தாண்டு 16 லட்சம் கொடுத்ததை அடுத்து, இந்தாண்டு 20 லட்சம் இலக்கு நிர்ணயித்துள்ளோம். ஆவின் நிலை முடிந்ததாக சொன்ன நிலையில், தற் போது நாளொன்றுக்கு ஆவின் 36 லட் சம் லிட்டர் பால் கொள்முதல் எப்படி செய்யபட முடியும்? விற்பனை அதிக ரிப்பு, தரமான கன்று இனங்கள் கொடுக் கிறோம். காப்பீடு, கடனுதவி, கால்நடை கள் பராமரிப்பு என தொடர் நடவடிக்கை  எடுத்து வருவதால், பால் கொள்முத லில் பாதிப்பு ஏற்படாது. விற்பனை, தரம்,  விலை ஆகியவை ஒரே மாதிரியான செயல்முறைகள் மற்றும் அரசின் திட் டங்களுக்கு வரவேற்பு உள்ளதால், எந்த  பிரச்னையும் இருக்காது. மாற்றுத்திற னாளிகள், வேலை இல்லாதவர்கள், திருநங்கைகள் ஆகியோருக்கு ஆவின் கடை நடத்திட அனுமதி கொடுத்து வரு கிறோம். தமிழகத்தின் அனைத்து பகுதி களிலும் ஆவின் கிளைகளை அமைக்க  விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கின்றன, என்றார்.