திருப்பூர், செப். 29 – திருப்பூர் மாநகராட்சியில் குடிநீர் கட்ட ணம் மற்றும் பாதாளச் சாக்கடை உபயோகக் கட்டணம் ஆகியவற்றை கடுமையாக உயர்த்தி தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், அதிமுக, காங்கிரஸ், தமாகா உள்ளிட்ட கட்சிகளின் மாமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரி வித்து தீர்மானத்தை ஒத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளிருப்புப் போராட்டம் மேற்கொண்டனர். இது ஏற்கெனவே அதிமுக ஆட்சிக் காலத் தில் பிறப்பிக்கப்பட்ட அரசாணை என்பதால் தீர்மானத்தை ரத்து செய்யும் அதிகாரம் மாமன்றத்துக்கு இல்லை. மன்றத்தின் பார் வைக்கும், பதிவு செய்யவும் முன்வைக்கப் படுகிறது. எனினும் திருப்பூர் தொழிலின் நலி வடைந்த நிலைமை மற்றும் திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆட்சேபணையை அரசின் கவ னத்துக்கு கொண்டு சென்று கட்டணத்தை குறைக்க கோருவதாக மேயர் ந.தினேஷ்கு மார் பதிலளித்தார். திருப்பூர் மாநகராட்சி மாமன்றக் கூட்டம் வெள்ளியன்று மாநகர மேயர் ந.தினேஷ்கு மார் தலைமையில் ஆணையர் பவன்குமார் கிரியப்பனவர் முன்னிலையில் நடைபெற் றது. துணை மேயர் ஆர்.பாலசுப்பிரமணியம், மண்டலத் தலைவர்கள் மற்றும் அனைத்து கட்சிகளின் மாமன்ற உறுப்பினர்கள் இக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதில் அவசரக் கூட்டத் தீர்மானம் எண் 390இன்படி குடிநீர் இணைப்பு வைப்புத் தொகை, பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்தியும், தீர்மானம் எண் 391இன்படி பாதாளச் சாக்கடை இணைப்பு வைப்புத் தொகை மற்றும் சேவைக் கட்டணத்தை உயர்த்தியும் முன்மொழியப்பட்டது. இந்த தீர் மானங்களில் குடிநீர் மற்றும் பாதாளச் சாக் கடை இணைப்பு, பயன்பாட்டுக்குரிய பல் வேறு நிபந்தனை விபரங்களும் பட்டியலிடப் பட்டிருந்தன. இத்தீர்மானத்தை மன்றத்தில் முன்மொ ழிந்தபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாமன்ற உறுப்பினர் ஆர்.மணிமேகலை எழுந்து, மக்களை கடுமையாக பாதிக்கக் கூடிய இந்த இரு கட்டண உயர்வு தீர்மானங்க ளையும் ஒத்தி வைக்க வேண்டும். அவசரக் கூட்டப் பொருளாக விவாதிக்க வேண்டிய தில்லை. இதற்காக தனிக் கூட்டம் நடத்தி அனைத்துக் கட்சிகள் விவாதித்து பின்னர் முடிவு செய்யலாம் என்று கூறினார். அதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாமன்றக்குழுத் தலைவர் எஸ்.ரவிச்சந் திரனும் இந்த இரு தீர்மானங்களையும் ஒத்தி வைக்க வேண்டும், தனி கூட்டத்தில் பேசி தீர் மானிக்கலாம் என்றார். அதிமுகவினரும் இத்தீர்மானத்தை எதிர்ப்பதாகக் கூறினர். அப்போது பதில ளித்த மேயர் ந.தினேஷ்குமார், இது முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் 2020ஆம் ஆண்டு மாநகராட்சி தனி அலுவலரால் கொண்டு வரப் பட்டு மாநில அரசால் அரசாணை பிறப்பிக்கப் பட்டுள்ளது. எனவே இதை ரத்து செய்யும் அதி காரம் மாமன்றத்துக்கு இல்லை. மன்றத்தின் பார்வைக்கும், பதிவுக்கும் வைக்கப்படுகி றது என்று கூறினார். அப்போது பேசிய காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர் செந்தில்குமார், அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டது என்றாலும், இப்போது நம்மிடம் அதிகாரம் உள்ள நிலை யில் இந்த தீர்மானங்களை அப்படியே நிறை வேற்ற வேண்டியதில்லை. அரசாணையை ரத்து செய்ய மாமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்றாலும், அதை திருத்தம் செய்து அரசுக்கு அனுப்பலாம் என்று ஆலோசனை கூறினார். அதிமுகவினரும் இந்த தீர்மானங்க ளுக்கு எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
அத்து டன் தாமாக மாமன்ற உறுப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்தார். எனினும் தீர்மானத்தை பார் வைக்கும், பதிவுக்கும் முன்வைத்திருப்பதா கவும், மன்றத்தில் உறுப்பினர்கள் தெரி வித்த கருத்துகளை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாகவும் மேயர் தினேஷ்கு மார் மீண்டும் கூறினார். அதைத் தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பி னர்கள் முன்வந்து எதிர்ப்புத் தெரிவித்தனர். எனினும் மேயர், துணை மேயர், திமுக, மதி முக, முஸ்லிம் லீக், பாஜக கட்சிகளின் மாமன்ற உறுப்பினர்கள், ஆணையர் உள் ளிட்ட அதிகாரிகள் கூட்ட அரங்கை விட்டு புறப் பட்டுச் சென்றனர். ஆனால் இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் தீர்மானத்தை ஒத்திவைக்கக் கோரி உள்ளிருப்புப் போராட் டத்தில் ஈடுபட்டனர். அதிமுக, தமாகா மாமன்ற உறுப்பினர்களும் வெளியேறி சென் றுவிட்டு உள்ளே வந்து அமர்ந்து கொண்ட னர். முன்னதாக மன்றக் கூட்டம் தொடங்கிய போது இத்தீர்மானங்களை ஒத்தி வைக்கக் கோரி அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட மாமன்ற உறுப்பினர்களும் எதிர்ப்புத் தெரி வித்தனர். இக்கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சிகளின் மாமன்ற உறுப்பினர்கள், திருப்பூரின் தற் போதைய தொழில் நிலைமையில் மக்கள் மீது தாங்க முடியாத சுமையாக இது இருக்கும். எனவே குடிநீர், பாதாளச் சாக்கடைக் கட்ட ணத்தை உயர்த்தக் கூடாது என்று வலியு றுத்தினர்.உள்ளிருப்புப் போராட்டம் நடை பெற்ற நிலையில், துணைமேயர் ஆர்.பால சுப்பிரமணியம் அங்கு வந்து, பேசினார். மேயர், திமுக கூட்டணி கட்சிகளின் ஆட்சே பத்தையும், திருப்பூரின் தற்போதைய நிலை யையும் அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று கட்டணங்களைக் குறைக்க கோரியி ருப்பதாகவும், அதை ஏற்றுக் கொள்ள வேண் டும் என்றார். அதை ஏற்று உள்ளிருப்புப் போராட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. மேயர் ந.தினேஷ்குமார் கூறுகையில், அதிமுகவினர் ஆட்சிக் காலத்தில் கடன் வாங் கிவிட்டு, அதற்கான நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு, கையெழுத்திட்டுள்ளனர். அதன் அடிப்படையில் அரசாணை பிறப்பிக்கப்பட் டுள்ளது. இதை மாமன்றம் ரத்து செய்ய இய லாது. எனினும் இந்த கட்டணங்களைக் குறைப்பதற்கு அரசிடம் கோருவதாக தெரி வித்தார்.