districts

img

சிபிஎம் தலைமையில் மாநகராட்சியை முற்றுகையிட்ட மக்கள்

திருப்பூர், மே 8- திருப்பூர் மாநகராட்சி, 57ஆவது வார்டுக்குட்பட்ட திருக்குமரன் நகர் பகுதி மக்கள் அடிப்படை வசதி செய்து தரக்கோரி மார்க்சிஸ்ட் கட்சி யின் தலைமையில் மாநகராட்சி அலு வலகத்தை முற்றுகையிட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திருக்குமரன் நகர் கிளை சார் பில் சுப்பிரமணியம் உள்ளிட்ட பொது மக்கள் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் பா.லட்சுமியுடன் திங்க ளன்று மாநகராட்சி அலுவலகத் துக்கு வந்து அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி முழக்கம் எழுப்பி னர். இவர்களை அழைத்து மேயர் ந. தினேஷ்குமார் பேச்சுவார்த்தை நடத் தினார்.  இதில் 57ஆவது வார்டு, திருக் குமரன் நகர் பகுதிக்கு சாக்கடை வசதி, சாலை வசதி கோரி 2018ஆம் ஆண்டு முதல் அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும் எவ்வித நட வடிக்கையும் எடுக்கவில்லை. அடிப்படை வசதி இல்லாததால் வீடுகள் முன்பு சாக்கடை தேங்குவ தால் தினமும் சண்டை, சச்சரவு, துர் நாற்றம், மழை காலங்களில் வீதியில் நடக்க முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே உடனடியாக சாலை, சாக் கடை வசதி செய்து தர வேண்டும் என்றனர். கோரிக்கைகளை கேட்ட மேயர் தினேஷ்குமார் விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி யளித்ததாகத் தெரிவித்தனர்.