districts

வேலம்பாளையம் பகுதியில் உள்ள அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க மார்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

திருப்பூர், ஜூன் 30- வேலம்பாளையம் பகுதியில் உள்ள சாலை, குடிநீர், கழிவுநீர் உள் ளிட்ட பிரச்சனைகளை உடணடியாக  தீர்க்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வேலம்பாளையம் நகரக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின், 15.வேலம்பாளையம் நகரக் குழுக் கூட்டம் வெள்ளியன்று நகரக் குழு உறுப்பினர் அ.ஆறுமுகம் தலை மையில் நடைபெற்றது. இதில்,  கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் கே.உண்ணிகிருஷ்ணன், கே.ரங்கராஜ், நகரச் செயலாளர் ச. நந்தகோபால் உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர். இக்கூட்டத் தில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. 10  ஆவது வார்டு காமராஜர் காலனி, காயத்திரி நகர், ராஜீவ்  காந்தி நகர், கோகுலம் காலனி,  மாரியம்மன் கோவில் வீதிகளில்  மற்றும் 14 ஆவது வார்டில் அனுப் பர்பாளையம், பெரியார்காலனி, முத்துகோபால் நகர், நேதாஜி நகர்,  கவிதாலட்சுமி நகர், முருகன் காலனி  சந்து வீதிகள் முழுமையும் மக்கள்  பயன்பாட்டுக்கு உரியதாக இல்லை.  சாக்கடை வடிகால்களும் முறையாக  பராமரிக்கப்படவில்லை. 11,12,13,14, 24 ஆகிய வார்டுகளில் சாலைகள்  குண்டும், குழியுமாக உள்ளது. ஒரு  பகுதியில் குடிநீர் சாக்கடையில் ஓடும்  அளவுக்கு அதீதமாகவும், மற்ற பகுதி களில் மிகக்குறைந்த அளவிலும் விநி யோகம் செய்யப்படுகின்றன. சாக்க டைகள் சுத்தம் செய்வதில் உரிய கவ னமில்லை. பாதாளச் சாக்கடை இணைப்பு பல பகுதிகளில் விடுபட் டுப் போயுள்ளது. 25 ஆவது வார்டு மாநகரின் விரிவாக்கப் பகுதியாக இருக்கிறது. மக்களின் அடிப்படை வசதிகள் மிக மோசமான நிலையில் உள்ளது.

வேலம்பாளையம் முதல்  சோளிபாளையம் வரையான சாலை  உள்ளிட்டு ரங்கநாதபுரம், அணைப் பாளையம், காவிலிபாளையம், ஆனந்தா அவென்யூ, சோளிபாளை யம் என அனைத்துச் சாலைகளும் குண்டும், குழியுமாக, மக்கள் பயன்ப டுத்த முடியாத அளவிலும், பல்வேறு  விபத்துகளை ஏற்படுத்தும் வகையி லும் உள்ளன. பல பகுதிகள் தெருவி ளக்குகள் இன்றி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. பாதாளச் சாக்க டைப் பணிகள் இன்னும் முழுமை யாக முடிக்கப்படவில்லை. தெரு நாய்கள் கடித்து பலர் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். ரேசன் கடைகளில் மக்களுக்கு முறையாக பொருள் விநியோகம் செய்திட பல கடைகளில் முழுநேரப்  பணியாளர்கள் இல்லை. ஆளெடுக் கும் பணி நிறைவுற்று பல மாதங்கள் ஆகியும் இன்னும் நியமனம் செய் யப்படாமல் உள்ளது. மாநகர், புறந கர், வெளியூர்ப் பேருந்துகள் பல  கொரோனா பெருந்தொற்றுக் காலத் தில் நிறுத்தப்பட்டுள்ளன. அதை முழு மையாக இயக்கிட வேண்டும். அதே போல நிறுத்தப்பட்ட பயணிகள் ரயில் களை உடனடியாக இயக்கிட வேண் டும். இப்படி குவிந்து கிடக்கும் மக்க ளின் முக்கியமான அடிப்படைத் தேவைகளை திருப்பூர் மாநகராட்சி யும், மாவட்ட நிர்வாகமும், குடிமைப்  பொருள் வழங்கல் துறையும், போக் குவரத்துத் துறையும், ரயில்வே துறையும் முன்னுரிமைப் பணியாக நிறைவேற்ற வலியுறுத்தி தீர்மாணம் நிறைவேற்றப்பட்டுள்ளது.