districts

img

தேர்தல் பத்திரங்களுக்கு உச்சநீதிமன்றம் தடை மார்க்சிஸ்ட் கட்சி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

கோவை, பிப். 15- தேர்தல் பத்திரங்களுக்கு தடை  விதித்ததையொட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பொதுமக் களுக்கு இனிப்பு வழங்கி கொண்டா டினர்.  அரசியல் கட்சிகள் தேர்தல் பத் திரங்கள் மூலம் நன்கொடை பெறும்  முறையை கடந்த 2018ஆம் ஆண்டு  ஒன்றிய பாஜக அரசு அமல்படுத்தி யது. இதற்கென ரிசர்வ் வங்கி சட் டத்திலும், வருமான வரி சட்டத்தி லும், கம்பெனி சட்டத்திலும், வெளி நாட்டு நாணய சட்டத்திலும் சில திருத்தங்களை ஒன்றிய பாஜக அரசு மேற்கொண்டது. இந்த தேர் தல் பத்திரங்களை எஸ்.பி.ஐ வங்கி  விற்பனை செய்து வந்தது. இதில் நன்கொடையாளர்கள் விவரம் பொது வெளியில் பகிரப்படாமல் இருந்து வந்தது. தேர்தல் பத்திர நடைமுறையை சிபிஐ(எம்) மற்றும் ஜனநாயக சீர் திருத்தத்துக்கான அமைப்பு கடு மையாக விமர்சித்தது. இதைய டுத்து சிபிஐ(எம்) சார்பாக பொதுச்  செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, ஏடிஆர் மற்றும் ஜெயா தாகூர் என்ப வரும் தேர்தல் பத்திரங்களுக்கு எதி ராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கின் விசா ரணை கடந்த ஆண்டு நவம்பர் 2- ஆம் தேதி நிறைவடைந்த நிலை யில், உச்சநீதிமன்றம் வியாழ னன்று தீர்ப்பு வழங்கியது. அதில்,  தேர்தல் பத்திரங்கள் மூலம் அர சியல் கட்சிகள் நன்கொடை பெறும்  முறை சட்டவிரோதமானது. எனவே  இந்த நடைமுறையை ரத்து செய்வ தாக உச்சநீதிமன்றம் உத்தரவிட் டது. மேலும்,தேர்தல் பத்திரங்களை விற்பதை உடனடியாக நிறுத்த வும், 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் 12- ஆம் தேதி முதல் வியாழன் வரை  வாங்கப்பட்ட தேர்தல் பத்திரங்க ளின் விவரங்களையும், அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்ற நன்கொடை விவ ரங்களையும் தேர்தல் ஆணையத்தி டம் மார்ச் 6-ஆம் தேதிக்குள் சமர்ப் பிக்கவும், எஸ்.பி.ஐ வங்கிக்கு உச் சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை வரவேற்கும் விதமாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோவை மாவட்டக் குழு சார்பில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி  கொண்டாடப்பட்டது. கோவை காந் திபுரம் பேருந்து நிலையம் அருகே  நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கோவை  நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் தலைமை வகித்தார். கட் சியின் கோவை மாவட்டச் செயலா ளர் சி.பத்மநாபன், சிஐடியு மாவடட் டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் மாவட்டச் செயற்குழு உறுப் பினர்கள், மாவட்டக் குழு உறுப்பி னர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நிகழ்ச்சியில் பி. ஆர்.நடராஜன் எம்.பி., பேசுகை யில், கார்ப்பரேட் நிறுவனங்களின் லஞ்சம், முறைகேடான நிதி, தேர் தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை  பெற்று வரும் அரசியல் கட்சிகள் குறித்து, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெற மறுத்த ஒரே இயக்கம் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் தான். தேர்தல் பத்திரங்கள் மூலம் பெறப்பட்ட ஆயிரக்கணக்கான கோடியை பாஜக திரும்பக் கொடுக்க வேண்டும். உச்ச நீதிமன் றத்தில் 5 அமர்வு கொண்ட நீதிபதி கள் சரியான முறையில் தீர்ப்பு வழங் கியதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. நீதிமன்றம் அறிவித்த தேதிக்குள் நன்கொடை பெற்ற அனைத்து கட்சிகளும் நிதியை திரும்பி கொடுக்க வேண் டும் என தெரிவித்தார்.