districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் வகுப்பு

சேலம், ஜன.1- ஓமலூர் அருகே நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் வகுப்பில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சேலம் மாவட்டம், ஓமலூர் சுந்தரம் திருமண மண்டபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் வகுப்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, கட்சியின் ஓமலூர் தாலுகாச் செயலாளர் என்.ஈஸ்வரன் தலைமை வகித்தார். இதில் “மானுட வரலாறும், மார்க்சியமும்” என்ற தலைப்பில் சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.சிந்தன், “அடையாள அரசியலும், பாசிசமும்” என்ற தலைப்பில் தென்சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் லெனின் ஆகியோர் கருத்துரையாற்றினர். இதைத்தொடர்ந்து “கட்சி ஸ்தாபனம்” என்ற தலைப்பில் சேலம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் குணசேகரன் பேசினார். இந்நிகழ்ச்சியில் பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.