திருப்பூர், பிப்.26- வேலம்பாளையம் சாலையில் அரசு அனுமதி பெறாமல் இயங்கி வரும் டாஸ் மாக் பாரை இழுத்து மூடக் கோரி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலம்பா ளையம் நகரக்குழு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று மனு அளிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலம்பாளையம் நகரக்குழு செயலா ளர் ச.நந்தகோபால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறி யிருப்பதாவது, திருப்பூர் மாநகராட்சி, வார்டு எண் 13, அ.புதூர் வேலம்பா ளையம் சாலையில் உள்ள டாஸ்மாக் கடை எண் 1998 ல் உள்ள பாரை ராஜா என் பவர், அரசு அனுமதி பெறாமல் நடத்தி வருவதாகத் தெரிய வருகிறது. மேலும், அந்த பாரில் வேலைக்கு அமர்த்தப்பட் டுள்ள ரவுடிகளின் செயல்களால், அப்ப குதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். பேருந்து நிறுத்தத்துக்கு அருகிலேயே இந்த பார் உள்ளதால், பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பாதுகாப்பாக அந்தச் சாலையைப் பயன்படுத்த முடியாமல் சூழல் உருவாகியுள்ளது. கடந்த பிப்.22 ஆம் தேதி அந்த பாரில் இருந்து ரவுடிகள் முருகானந்தம், ராமலிங்கம், மணிகண் டன் மற்றும் கார்த்திக் ஆகியோர் அரு கில் பெட்டிக்கடை நடத்தி வரும் குணசே கர், மற்றும் அவரது மகன் கௌரிசங்கர் ஆகியோரை சாலையில் இழுத்துக் கொண்டு போய், கட்டைகள், பிளாஸ் டிக் பைப்புகள், கற்களைக் கொண்டு கடு மையாக தாக்கியுள்ளனர். இதில், பாதிக் கப்பட்ட இருவரும் ரத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். பொதுமக்களை அச்சுறுத்தும் இத்தகைய ரவுடிக் கும்ப லின் அட்டகாசத்தை ஒடுக்கவும், சட்டவி ரோதமாக இயங்கி வரும் டாஸ்மாக் பாரை இழுத்து மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருக்கிறது. மேலும் இதே கோரிக்கை குறித்து, மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட மேலாளர் (டாஸ்மாக்) ஆகியோரை சந் தித்து வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்வில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ரங்கராஜ், சிஐடியு டாஸ் மாக் ஊழியர் சங்கம் மாவட்டச் செய லாளர் ஒய்.அன்பு, வேலம்பாளையம் நகரக்குழு உறுப்பினர் பி.சின்னச்சாமி, அ.புதூர் கிளைச் செயலாளர் என்.விஸ் வநாதன் மற்றும் எஸ்.சேகர் ஆகி யோர் கலந்து கொண்டனர்.