districts

img

பாதாளச் சாக்கடை குழாயில் தவறி விழுந்தவர் பலி

திருப்பூர், ஜன.31-  திருப்பூரில் பாதாளச் சாக்க டைக்கு அமைக்கப்பட்ட மேன் ஹோல் குழாயில் தவறி விழுந்த வர் உயிரிழந்தார். மாநகராட்சி நிர் வாகத்தின் அலட்சியத்தின் காரண மாகவே இந்த சம்பவம் நிகழ்ந்தது என்று குற்றஞ்சாட்டியுள்ள மக் கள் உடனடியாக பாதுகாப்பு ஏற்பா டுகளைச் செய்வதுடன், உயிரிழந் தவர் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று  கேட்டுக் கொண்டுள்ளனர். திருப்பூர் மாநகராட்சிக்கு உட் பட்ட 18 ஆவது வார்டு வி.கே.ஆர். நகர் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட  பணிகள் நடைபெற்று வருகின் றன. இந்த நிலையில் அப்பகுதி யில் பாதாள சாக்கடை கட்டுமா னம் அமைக்கும் பணி நடைபெற்று  வருகிறது. இதில் பாதாளச் சாக் கடையில் பழுது ஏற்பட்டால் மனி தர்கள் இறங்கி வேலை செய்வதற் காக குறிப்பிட்ட இடைவெளியில் மேன்ஹோல் எனப்படும் குழாய் கள் அமைக்கப்பட்டு அவற்றை காங்கிரீட் மூடி வைத்து அடைத்து விடுவார்கள். ஆனால் புதிதாக கட்டப்பட்ட இந்த மேன்ஹோல் குழாயில் எவ்விதமான மூடியும் இல்லாமல், வேறு தடுப்பு கொண் டும் மறைக்காமல் திறந்த நிலையி லேயே அந்த குழாயை விட்டுவிட்ட னர். இந்நிலையில், ஞாயிற்றுக்கி ழமை இரவு அப்பகுதியில் நடந்து  சென்ற நபர் ஒருவர் பாதாள சாக் கடை மேன்ஹோல் குழாய் இருப் பது தெரியாமல் தடுமாறி அதற் குள் தலை குப்புற விழுந்துவிட் டார். கால் மடங்கிய நிலையில்  உள்ளே அவர் சிக்கிக் கொண்டார். இரவு நேரமாகவும், அருகாமை யில் மக்கள் நடமாட்டம் இல்லாத  நிலையிலும் அந்த நபர் அங்கு  விழுந்தது யாருக்கும் தெரிய வில்லை.

இந்நிலையில், திங்களன்று அதிகாலை அப்பகுதி பொதுமக் கள் அந்த பாதை வழியாக போன போது, பாதாள சாக்கடைக் குழா யில் ஒருவர் தலைகீழாக விழுந்து கிடப்பதைக் கண்டு உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை யினர் பாதாள சாக்கடைக்குள் விழுந்திருந்தவரின் உடலை மீட்ட னர். அவர் ஏற்கெனவே இறந்து கிடந்தார். இதையடுத்து அவரது சடலத்தை  மீட்டு பிரேத பரிசோத னைக்காக திருப்பூர் மாவட்ட அரசு  தலைமை மருத்துவமனை மருத்து வக் கல்லூரிக்கு அனுப்பி வைத் துள்ளனர். இந்த சம்பவம் குறித்து அப் பகுதி மக்கள் சார்பாக மார்க்சிஸ்ட்  கட்சியின் எம்.எஸ்.நகர் கிளைச் செயலாளர் ஈ.பி.ஜெயகிருஷ் ணன் கூறுகையில், அப்பகுதியில் பல்வேறு பகுதிகளிலும் பாதாளச் சாக்கடை பணிகள் நடைபெற்று வருகின்றன. பல இடங்களிலும் மேன்ஹோல் குழாய்கள் திறந்த நிலையிலேயே விடப்பட்டுள்ளன. மக்கள் நெருக்கமும், நடமாட்ட மும் அதிகமுள்ள இப்பகுதிகளில்  கட்டுமானப் பணி முடிந்த பாதாளச் சாக்கடை குழாய்களை உடனடி யாக மூட வேண்டும் அல்லது அங்கு குழாய் திறந்திருப்பதை எச் சரிக்கை பலகை வைத்து அடைத் திருக்க வேண்டும். இது தொடர் பாக பல முறை மாநகராட்சி நிர்வா கத்திற்கு கோரிக்கை வைக்கப்பட் டது. ஆனால் மாநகராட்சி நிர்வா கம் அலட்சியமாகவே செயல் பட்டு வந்தது. இதன் காரணமா கவே தற்போது ஒருவரது உயிர்  பறிக்கப்பட்டு விட்டது. எனவே, இதற்கு மாநகராட்சி நிர்வாகம் பொறுப்பேற்று, சம்பந்தப்பட்ட ஒப் பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க  வேண்டும். உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும். உடனடியாக பாதாள சாக்கடை குழாய்களை மூட வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் சார்பில் வலியுறுத்தினார்.