சேலம், ஏப்.20- மின்னணு வாக்குப்பதிவு இயந்தி ரங்கள் சேலம் கருப்பூர் அரசு பொறியி யல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத் தில் உள்ள இருப்பு அறையில் ஐந்த டுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள் ளது. மக்களவை தேர்தலுக்கான வாக் குப்பதிவுகள் வெள்ளியன்று முடிவுற் றதை தொடர்ந்து, சேலம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட, சேலம் வடக்கு, சேலம் மேற்கு, சேலம் தெற்கு, வீர பாண்டி, எடப்பாடி மற்றும் ஓமலூர் ஆகிய சட்டமன்ற தொகுதி வாக்குச் சாவடி மையங்களிலிருந்து வாக்குப் பதிவு இயந்திரங்கள் உரிய போலீஸ் பாதுகாப்புடன் சேலம், கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி வளாகங்களில் சட்டமன்ற தொகுதி வாரியாக அமைக் கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத் தில் உள்ள தனித்தனி இருப்பு அறைக ளில் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன் னிலையில் சனியன்று பூட்டி சீல் வைக்கப்பட்டது. சேலம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட தொடர்புடைய சட்ட மன்ற தொகுதிகளுக்கு அமைக்கப்பட் டுள்ள இருப்பு அறைகளில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஐந்தடுக்கு பாது காப்புடன் வைக்கப்பட்டு கண்காணிக் கப்படுகிறது. வாக்கு பதிவு இயந்திரங் கள் கண்காணிக்கும் வகையில் இருப்பு அறைகளுக்கு உட்புறம் மற்றும் வெளிப்புறம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் சிசிடிவி கண்காணிப்புக் கேமராக்கள் அமைக்கப்பட்டு அரசியல் கட்சி பிரமுகர்கள், காவல்துறையினர் உள்ளிட்டோர் கண்காணிக்கும் வகை யில் கட்டுப்பாட்டு அறைகளும் அமைக் கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தேர்தல் பொதுப் பார்வையாளர் ஜி.பி.பாட்டீல், மாவட்ட தேர்தல் அலுவலர் ரா.பிருந்தாதேவி ஆகியோர் கருப்பூர் அரசு பொறியி யல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப் பட்டுள்ள வாக்கும் எண்ணும் மையத் தில் பாதுகாப்பு அம்சங்கள் முழுமை யாக மேற்கொள்ளப்பட்டுள்ளது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய் வின்போது, சேலம் மாநகராட்சி ஆணை யர் சீ.பாலச்சந்தர், மாவட்ட வருவாய் அலுவலர் பெ.மேனகா, மாவட்ட ஆட்சி யரின் நேர்முக உதவியாளர் எம்.ஜெக நாதன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஏ.சிவசுப்பிரமணியன், பொதுப் பணித்துறை செயற்பொறியா ளர் தியாகராஜன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் செயற்பொறியா ளர் சேகர் உள்ளிட்ட தொடர்புடைய அலு வலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத் தும் அலுவலர்கள் உடனிருந்தனர். நாமக்கல் இதேபோன்று நாமக்கல் நாடாளு மன்றத் தொகுதிக்குட்பட்ட 1661 வாக் குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள், திருச்செங்கோடு அடுத்த எளையாம் பாளையத்தில் அமைந்துள்ள, வாக்கு கள் எண்ணும் மையமான விவேகா னந்தா மகளிர் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்திற்கு வெள்ளியன்று இரவு கொண்டு வரப்பட்டது. இதைத்தொ டர்ந்து சனியன்று காலை மாவட்ட தேர் தல் அலுவலர் ச.உமா, தேர்தல் பொதுப் பார்வையாளர் ஹர்குன்ஜித் கவுர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் மற்றும் வேட்பாளர் கள் முன்னிலையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டது. வாக்கு எண் ணும் மையத்திற்கு நான்கடுக்கு பாது காப்பு போடப்பட்டுள்ளது. சுழற்சி முறை யில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தருமபுரி தருமபுரி நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குப்பெட்டிகள் சட்டமன்ற தொகுதி வாரியாக தருமபுரி அருகே உள்ள செட்டிகரை அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டுள் ளது. இதைத்தொடர்ந்து அங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் கி.சாந்தி, தேர்தல் பொதுப் பார்வையாளர் அருணா ரெஜோரியா, வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசு பாதம் ஆகியோர் ஆய்வு மேற்கொண்ட னர். கோவை கோவை மக்களவை தொகுதியில் மொத்தம் 2045 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. இந்நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, கோவை தடாகம் சாலை யில் அமைந்துள்ள அரசு பொறியியல் கல்லூரி (ஜிசிடி) வளாகத்தில் அமைக் கப்பட்டுள்ள இருப்பறைக்கு கொண்டு வரப்பட்டது. தேர்தல் பொது பார்வை யாளர், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகர் ஆகியோர் முன்னிலையில், வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர் முன்னிலையில் பாதுகாப்பாக அறைகளில் வைக்கப் பட்டு சீல் வைக்கப்பட்டது. ஈரோடு ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் 1688 வாக்குச்சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. 70.5 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. பயன்ப டுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் மையமான சித்தோடு, ஈரோடு அரசினர் பொறியியல் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு, வேட்பாளர்கள் முன்னிலை யில் இருப்பறையில் வைக்கப்பட்டு சீல் இடப்பட்டுள்ளது.