கழிவுநீரை திறந்து விட்ட லாரி சிறைபிடிப்பு
பொள்ளாச்சி, செப்.9- மீன்களை ஏற்றிச்சென்ற லாரியில் இருந்து கழிவு நீரை கிராமப்பகுதி சாக்கடை கால்வாயில் திறந்து விட் டதை பார்த்த அப்பகுதியினர் லாரி மற்றும் ஒட்டுநரை சிறைபிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். கேரள மாநிலம், கோழிக்கோடு பகுதியில் இருந்து நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன் என்பவருக்கு சொந்தமான லாரியில், திங்களன்று தூத்துக்குடி பகு திக்கு மீன்களை ஏற்றிக்கொண்டு சென்றது. மீன்கள் கெட்டுப் போகாமல் இருப்பதற்காக ஐஸ் கட்டிகளை வைத்துள்ளனர். அதிக வெப்பம் காரணத்தினால் ஐஸ் கட்டி உருக துவங்கியது. இதனை கண்ட ஓட்டுநர் பொள் ளாச்சி அடுத்த கோமங்கலம் புதூர் பகுதியில் வாக னத்தை நிறுத்தியுள்ளார். பின்னர், மீன் கழிவுகளுடன் கூடிய அந்த துர்நாற்றம் வீசக்கூடிய நீரை சாலையோ ரம் திறந்து விட்டுள்ளார். இதைக் கண்ட கிராம பொது மக்கள் அந்த லாரியை சிறைபிடித்து கோமங்கலம் காவல் நிலைய காவல் துறையினருக்கு தகவல் தெரி வித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறை யினர் ஓட்டுநர் அசோக் மற்றும் லாரியை கைப்பற்றி கோமங்கலம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்ற னர். விசாரணையில், இந்த ஓட்டுநர் இதேபகுதியில் மூன்று முறை கழிவு நீரை திறந்து விட்டு சுகாதார சீர்கேடை ஏற்படுத்தி உள்ளதாக தெரியவந்தது. பின்னர் கோமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஓட்டுநர் அசோக் மீது வழக்கு பதிவு செய்தனர். அதே போல ஊராட்சி நிர்வா கமும் அபராதம் விதிப்பதற்கான நடவடிக்கையை மேற் கொண்டு வருகின்றனர்.
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: 20 ஆண்டுகள் சிறை
உதகை, செப்.9- திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உதகை நீதிமன்றம் தீர்ப்பளித்துள் ளது. சிவகங்கை மாவட்டம், சிங்கம் புணரி கக்கன்ஜி நகரைச் சேர்ந்தவர் ராஜபாண்டி என்ற பாண்டியன் (31). இவர் நீலகிரி மாவட்டம், கோத்த கிரியில் உள்ள தங்கும் விடுதியில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு ஏற்க னவே திருமணமாகியிருந்தது. இந் நிலையில் தங்கும் விடுதி அருகே 12 ஆம் வகுப்பு படித்து தனியார் மில் லில் பணிபுரிந்து வந்த 17 வயது சிறுமி டம் பழகி வந்துள்ளார். கடந்த 5.10.2020 ஆம் தேதியன்று, திரு மணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி சிறுமியை கோவை அழைத்து சென்றுள்ளார். அங்கு தனது நண்பர் வீட்டில் தங்க வைத்து தினந்தோறும் பாலியல் ரீதியாக வன்கொடு மையை செய்துள்ளார். மேலும், சிறு மியை கிணத்துக்கடவு பகுதிக்கு அழைத்துச் சென்று இருவரும் தனி யார் மில்லில் பணிக்கு சேர்ந்து அங் குள்ள வீட்டில் குடியேறி உள்ளனர். இதற்கிடையில், சிறுமி காணா மல் போனதை அறிந்த அவரது தாய் கோத்தகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து சிறு மியை காவல் துறையினர் தேடுவதை அறிந்த ராஜபாண்டி சிறுமியை மீண் டும் கோத்தகிரிக்கு கொண்டு வந்து விட்டு விட்டு தலைமறைவாகி விட் டார். சிறுமியை மீட்ட கோத்தகிரி காவல் துறையினர் விசாரணை செய் ததில் திருமண ஆசை வார்த்தை கூறி ராஜபாண்டி பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது. இதனை யடுத்து ராஜபாண்டியனை கைது செய்த போலீசார் அவர் மீது போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்து சிறை யில் அடைத்தனர். இந்த வழக்கு உதகை மகளா நீதி மன்றத்தில் நடந்து வந்த நிலையில், திங்களன்று இந்த வழக்கை விசா ரித்த நீதிபதி லிங்கம், 17 வயது சிறு மியை பாலியல் வன்கொடுமை செய்த ராஜபாண்டிக்கு 20 ஆண்டு கள் சிறை தண்டனை விதித்தார். அரசு வழக்கறிஞராக செந்தில் வாதிட் டார். இதைத்தொடர்ந்து மதுரை மத் திய சிறையில் இருந்த ராஜபாண் டியை, கோவை மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.
பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: ஆட்சியரிடம் புகார்
தருமபுரி, செப்.9- ஆக்கிரமிக்கப்பட்ட பொதுப்பாதையை மீட்டுத்தர வேண்டும் என வலியுறுத்தி பட்டி யலின மக்கள் தருமபுரி ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதுதொடர்பாக அம்மனுவில், தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், பாப்பாரப் பட்டி பேரூராட்சிக்குட்பட்ட தியாகி சுப்பிர மணிய சிவா காலனியில், 50க்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் வசித்து வருகிறது. இந்த குடியிருப்பு அருகே உள்ள மாரியம்மன் கோவிலில் பட்டியலின மக்கள் 100 ஆண்டுக ளுக்கு மேலாக வழிபட்டு வருகின்றனர். இக் கோவிலுக்கு செல்லும் வழியில் தனிநபர் ஆக் கிரமித்து தன் விவசாய நிலத்துடன் சேர்ந்து வழியை ஆக்கிரமித்துள்ளார். இதனால் கோவில் திருவிழாக்களில் சாமி ஊர்வலம் மற்றும் மாவிளக்கு எடுத்து வர முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, ஆக்கிர மிக்கப்பட்ட வழிப்பாதையை மீட்டுத்தர வேண் டும். பழுதடைந்து காணப்படும் தொகுப்பு வீடுகளை அடித்து விட்டு, பேரூராட்சி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் எங்கள் காலனிக்கு வீடு கட்டித்தர வேண்டும். இவ்வாறு அதில் வலியு றுத்தப்பட்டுள்ளது. போலி பத்திரப்பதிவு தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், எல் லாப்புடையாம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கெளாப்பாறை கிராமத்திலிருந்து ஈட்டியம் பட்டி குரங்குனேரிக்கு செல்லும் சாலையை, அப்பகுதி மக்கள் 100 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி வருகின்றனர். ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் கடந்த 20 ஆண்டுக ளுக்கு முன் மண்சாலை சீரமைக்கப்பட்டது. அதன்பிறகு 2021 ஆம் ஆண்டு ரூ.9,25,500 மதிப்பீட்டில் ஜல்லியை கொண்டு சீரமைக் கப்பட்டது. அதன்பின் 2024 ஆம் ஆண்டு ரூ.50,66,527 மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைக்க ஒப்பந்தம் கோரப்பட்டு பின் வேலை துவங்கியது. இந்நிலையில், அதேபகுதி யைச் சேர்ந்த தனிநபர் போலியாக கிரையம் செய்து, சாலை அமைக்கும் பணியை தடுத்து வருகிறார். எனவே, அவரின் போலியான பத்திரப்பதிவை ரத்து செய்து, தார்ச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் ஆட்சி யரிடம் மனு அளித்தனர்.
இருக்கை இல்லையா? பெண் மறியல்
பொள்ளாச்சி, செப்.9- தனியார் பேருந்தில் இருக்கை இல்லாததால் பெண் ஒருவர் திங்களன்று பேருந்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பொள்ளாச்சி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து கோவைக்கு 70க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்து கள் இயங்கி வருகிறது. இந்நிலையில், தினசரி காலை 9 மணிக்கு பொள்ளாச்சியில் இருந்து புறப்படும் தனியார் பேருந்தை மறித்து பெண் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டார். இது குறித்து விசாரிக்கையில், அந்த பெண் வழக்கமாக அம ரும் இடத்தில் வேறொரு பயணி உட்கார்ந்து இருந்ததால் ஆவேசமடைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனைய டுத்து, சம்பவ இடத்திற்கு வந்த பொள்ளாச்சி கிழக்கு போலீ சார், அப்பெண்ணிடம் சமாதானப்படுத்தி, வேறு ஒரு பேருத் தில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
விநாயகர் சதுர்த்தி விழா: கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட இந்து முன்னணி
அவிநாசி, செப்.9 – அவிநாசியில் பல்வேறு இடங்களில் இந்து முன்னணி நடத்திய விநாயகர் சதுர்த்தி விழாக்களில் கட்டுப்பாடு இன்றி இரவு பத்து மணிக்கு மேல் சினிமா பாடல்களை ஒலிபரப்பி பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி னர். அவிநாசி ஒன்றியத்தில் பல்வேறு இடங்க ளில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை களை வைத்திருந்தனர். தடை செய்யப்பட்ட ஒலிபெருக்கிகள் மூலம் பக்தி பாடல்கள் இல் லாமல், சினிமா பாடல்களை ஒலிக்கச் செய்த னர். குறிப்பாக இரவு 10 மணிக்கு மேலும் சினிமா பாடல்களை ஒலிபரப்பினர். இத னால் பொதுமக்களுக்கு இன்னல்கள் ஏற்பட் டுள்ளது. காவல் துறையினரும் இதைக் கண்டுகொள்ளவில்லை. விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு அவிநாசி காவல் நிலையத்தில் சாணம் தெளித்து பூசி மெழுகி உள்ளனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் அ.ஈஸ்வரமூர்த்தியிடம் கேட்ட போது, இந்திய அரசியல் சாசனத்திற்கு முர ணாக அரசு அலுவலகங்களில், குறிப்பிட்ட எந்தவொரு மதம் சார்ந்து அடையாளங் களை வைக்கவோ வழிபாடு செய்யவோ கூடாது. ஆனால் அவிநாசி காவல் நிலை யத்தில் விநாயகர் சதுர்த்தி தினத்தில் சாணம் தெளித்து பூசி மெழுகி உள்ளது ஏன் என்று கேள்வி எழுகிறது. அதுமட்டுமின்றி வெள்ளிக் கிழமைதோறும் அங்கு பூஜை நடத்தப்பட்டு வருவதாகவும் பலரும் புகார் கூறுகின்ற னர். இது போன்ற நிகழ்வுகள் நடத்துவதை மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கண்டிக்கிறோம். எதிர்வரும் காலங்களில் இது போன்ற நிகழ் வுகள் நடக்காதவாறு மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நிறுத்த வேண்டும் என்றார்.
கோட்டமங்கலத்தில் நாளை மின்தடை
உடுமலை, செப். 9- கோட்டமங்கலம் துணை மின்நிலையத்தில் 11 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகள்: பொன்னேரி, வெள்ளியம்பாளையம், கோட்டமங்கலம், அய்யம்பாளையம் புதூர், முருங்கப்பட்டி, சுங்காரமடக்கு மற் றும் குடிமங்கலம் ( ஒரு பகுதி) பகுதிகளில் மின்தடை ஏற்ப டும் என்று செயற்பொறியாளர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
ரூ.90 விற்கப்பட்ட ஒரு கிலோ பீன்ஸ்
திருப்பூர், செப்.9- வெள்ளக்கோவில் வாரச் சந்தையில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ.90க்கு விற்பனையானது. மற்ற காய்கறிகளை விட பீன்ஸ் வரத்து குறைவாக இருந்ததால் விலை உயர்ந்தது. வெள்ளக்கோவில் வாரச் சந்தையில் ஞாயிறன்று, கடந்த வாரத்தை விட பீன்ஸ் கிலோவுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.90க்கு விற் பனையானது. இதேபோல சின்ன வெங்காயம், பாகற்காய், தக்காளி ஆகியவை கிலோவுக்கு ரூ.15 வரை விலை உயர்ந் தது. இந்த வாரத்தில் திருமண முகூர்த்த நாட்கள் இருப் பதால் காய்கறிகளின் விலை சற்று அதிகமாக இருந்தது. சில்லறை விற்பனையில் காய்கறிகளின் விலை நிலவரம் (கிலோவுக்கு): பீன்ஸ் - ரூ.90, கேரட் - ரூ.80, பீட்ரூட், அவ ரைக்காய், பாகற்காய், பச்சை மிளகாய் - ரூ.60, பெரிய வெங்கா யம் - ரூ.50, சின்ன வெங்காயம், கத்தரிக்காய், உருளைக்கி ழங்கு, முள்ளங்கி, புடலங்காய், பீர்க்கங்காய் - ரூ.40, முட்டைக் கோஸ் - ரூ.30, தக்காளி, வெண்டைக்காய் - ரூ.25, இஞ்சி - ரூ.160, பூண்டு - ரூ.400. இவற்றுடன் கீரை வகைகள் ஒரு கட்டு - ரூ.10, மல்லித்தழை கட்டு - ரூ.60, புதினா கட்டு- ரூ.10, வாழைத்தண்டு ஒன்று- ரூ.20, வாழைப்பூ ஒன்று - ரூ.30, காலிஃபிளவர் ஒன்று- ரூ.30, சுரைக்காய் ஒன்று- ரூ.6 க்கு விற்பனையானது.
பரிசல்களின் தரத்தை ஆய்வு செய்ய வலியுறுத்தல்
தருமபுரி, செப்.9- ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இயக்கப்படும் பரிசல்களின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும் என சுற்றுலாப் பயணி கள் வலியுறுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தை அடுத்த கூத்தப் பாடி ஊராட்சிக்குட்பட்ட ஒகேனக்கல் பகுதியில் காவிரி ஆற் றின் அழகை காண பரிசல் இயக்கப்பட்டு வருகிறது. இதற் காக பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலகம் மூலம் 450க்கும் மேற்பட்ட பரிசல் ஓட்டிகளுக்கு உரிமம் வழங்கப்பட் டுள்ளது. ஒகேனக்கல் வரும் சுற்றுலாப் பயணிகளில் பெரும் பாலானோர் காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள் வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். மாவட்ட நிர்வா கத்தின் அனுமதியோடு நீர்வரத்திற்கு ஏற்ப ஊட்டமலை பரிசல் துறை, மாமரத்துக்கடவு பரிசல் துறை, சின்னாறு பரி சல் துறை உள்ளிட்ட பகுதிகளில் பரிசல்கள் இயக்கப்பட்டு வந்தது. தற்போது ஒகேனக்கல் சின்னாறு பகுதியில் இருந்து பிரதான அருவி வழியாக மணல்மேடு பகுதி வரை பரி சல்கள் இயக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித் துள்ளது. ஒகேனக்கல் வரும் சுற்றுலாப் பயணிகள் காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்வதற்கு நேரத்திற்கு உட்பட்டு ஒரு பரிசலுக்கு 4 நபர்களுக்கு ரூ.1,500 கட்டண மாக நிர்ணயித்துள்ளது. காவிரி ஆற்றில் பரிசல் பயணத்திற்கு அனுமதிக் கப்படும் பரிசல்களில் மேலே பூசப்பட்டுள்ள தார்கள் அதிக வெயிலின் காரணமாக உருகுவதால் சிறு துளை கள் ஏற்பட்டு, பயணத்தின் போது பரிசல்களுக்குள் தண்ணீர் புகுந்தும், பரிசல்களை சுற்றி வேயப்பட்டுள்ள மூங்கில்கள், அதன் திறனை இழந்து ஆற்றில் செல்லும் போது தானாக வளைந்து அருவிக்கு அருகிலும், எதிர் திசையில் செல்லும் போது திசை மாற்றிச் செல்வதாக புகார் எழுந்துள்ளது. மேலும், காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்குவதற்கு பரி சல் ஓட்டிகளின் வயது நிர்ணயிக்கப்படாததால், முதிய வர்களும் பரிசல்கள் இயக்குகின்றனர். அதிக நீர் வரத்தின்போது சுற்றுலாப் பயணிகளை சின்னாறு பரிசல் துறையில் இருந்து அழைத்துச் செல்லும் போதும், மாமரத்துக்கடவு பகுதியில் இருந்து ஆற்றைக் கடந்து தொம்பச்சிக்கல் பகுதிக்கும், மணல்மேடு பகுதியில் இருந்து தொம்பச்சிகல் பகுதிக்கும் வரும் போது நீரின் வேகம் காரணமாக முதியவர்களால் அதிக விசையுடன் பரிசல்களை இயக்க முடிவதில்லை. எனவே, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இயக்கப்படும் பரிசல்களின் தரம் குறித்தும், பரிசல் ஓட்டிகளின் வயது நிர்ணயம் செய்வது குறித்தும் அதிகாரி கள் ஆய்வு செய்ய வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தேசிய அளவிலான டேக்வாண்டா போட்டிகள்
பொள்ளாச்சி, செப்.9- 13 மாநிலங்கள் 600 மாணவ, மாணவிகள் பங்கேற்கும் தேசிய அளவிலான டேக் வாண்டோ போட்டிகள், கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ஞாயிறன்று துவங்கியது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த ஆச்சிபட்டி பகுதியில் உள்ள திஷா பள்ளியில் சி.ஐ.எஸ்.சி.இ பள்ளிகளுக்கு இடையிலான தேசிய அளவிலான டேக்வாண்டோ விளை யாட்டுப் போட்டிகள் கலை நிகழ்ச்சியுடன் துவங்கியது. இப்போட்டியில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தர பிர தேசம், வெஸ்ட் பெங்கால், ஒடிசா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இருந்து 600 க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொள்கின்ற னர். டேக்வாண்டோ போட்டி 14,17,19 ஆகிய வயதுகளுக்கு உட்பட்ட மாணவ, மாணவிக ளுக்கு இடையே மூன்று பிரிவுகளில் நடை பெறுகிறது. இப்போட்டிகள் 8 ஆம்தேதி துவங்கி 10 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. இதன் துவக்க விழா நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. மாநில பள்ளிகளுக்கு இடையே விளையாட்டுப் போட்டியின் ஒருங்கிணைப்பாளர் சார்லஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொடியேற்றி துவக்கி வைத்தார். இதுகுறித்து பயிற்சியாளர் கோதாண் டம் கூறுகையில், 13 மாநிலங்களைச் சேர்ந்த மாணவ, மாண விகள் வண்ணமயமான உடைகள் அணிந்து கலந்து கொண்டனர். கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக துவங்கிய நிகழ்ச்சியை பள்ளி மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் உற்சாகமாக கண்டு ரசித்தனர். மேலும், கோவை மாவட்டத்தில் முதல் முறையாக சென் சார் பாயிண்ட் முறை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. என்றார்.
வேளாண்மை பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா
ஆளுநர் பங்கேற்ற விழாவை புறக்கணித்த அமைச்சர்
கோவை, செப்.9- தமிழ்நாடு வேளாண்மை பல் கலைக் கழக 44 ஆவது பட்டமளிப்பு விழா, கோவை வேளாண் பல் கலை கழகத்தில் திங்களன்று நடை பெற்றது. இதில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். அதே நேரத்தில் பல்கலை கழகத்தின் இணை வேந்தரான அமைச்சர் எம். ஆர்.கே.பன்னீர் செல்வம் இவ் விழாவை புறக்கணித்தது பேசு பொருளாகி உள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல் கலைக்கழகத்தின் 44 ஆவது பட்ட மளிப்பு விழா பல்கலைக்கழக பட்ட மளிப்பு விழா அரங்கில் திங்களன்று நடைபெற்றது. இவ்விழாவில், தமிழ்நாடு ஆளு நரும், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேந்தரு மான ஆர்.என்.ரவி தலைமை வகித் தார். இதில், சிறப்பு விருந்தினராக மத்திய அரசின் பயிர் இரகங் கள் மற்றும் உழவர் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தலைவர் முனைவர். திரிலோச்சன் மஹா பத்ரா கலந்து கொண்டார். இதில், மொத்தம் 9 ஆயிரத்து 526 மாணவர்கள் இளமறிவியல், முது நிலை பட்டமேற்படிப்பு மற்றும் முனைவர் பிரிவில் பட்டம் பெற்ற னர். 3 ஆயிரத்து 415 மாணவர்கள் நேரடியாகவும், உறுப்பு மற்றும் இணைப்பு கல்லூரிகளில் இருந்து 6 ஆயிரத்து 111 மாணவர்கள் தபால் மூலமாகவும் பட்டங்களைப் பெறு கின்றனர். பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பேசிய மத்திய அரசின் பயிர் ரகங் கள் மற்றும் உழவர் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர், முனைவர்.திரிலோச்சன் மஹா பத்ரா பேசுகையில், இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம், வேளாண் துறை, வேளாண் பல் கலைக்கழகங்கள், தனியார் என பல்வேறு அமைப்புகள் மூலம் 2500 பயிர்கள் கடந்த 14 ஆண்டுக ளில் பருவநிலை மாறுபாடுகளை எதிர்கொள்ள உருவாக்கப்பட்டுள் ளது. 150 உயிரி செறிவூட்டப்பட்ட பயிர் ரகங்கள் உருவாக்கப்பட் டுள்ளது. மண் வளம், வறட்சி, தண் ணீர் பற்றாக்குறை, பருவநிலை மாற்றம் என்பது சவால்கள் நிறைந் ததாக உள்ளது. குறைவான தண் ணீரை உபயோகப்படுத்தும் தொழில் நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். விவசாயம், கால்நடை, நீர்வாழ் உயிரினங்களின் வளர்ப்பு என, உணவு சங்கிலியை தண்ணீர் பற்றாக்குறை பாதிக்கிறது. 2047 ஆம் ஆண்டு இந்தியா மக்கள் தொகைக்கு 400-430 மில்லியன் டன் தேவைப்படும் நிலையில், தற்போது 328-329 டன் உணவு தானி யங்கள் உற்பத்தியாகின்றது. தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் உணவு உற்பத்தி சிறப்பாக இருந்தபோதும், இந்தியாவில் உணவு உற்பத்தி திறனை அதி கரிக்க வேண்டும் என்ற தேவை இருக்கின்றது. புது புது திறன்களை வளர்த்துக்கொண்டு, வேலை வாய்ப்பு வழங்கும் தொழில் முனை வோர் ஆக பட்டம் பெரும் வேளாண் மாணவர்கள் கல்லூரிகளிலிருந்து வெளியேற வேண்டும். மாறி வரும் இந்தியா என்பது உலகத்தில் முதன் மையாக இருக்கும், அதற்கு தமிழ் நாடு வேளாண்மை பல்கலைகழ கம், போன்ற பல்கலைக்கழகங்கள் பெரிதும் உதவுகின்றன என்றார். தமிழக ஆளுநர், தொடர்ந்து வாய்க்கொழுப்பாக பேசி வருகிற நிலையில், தனது எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாகவே அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் விழாவில் பங்கேற்க வில்லை என பல்கலைக் கழக வட்டாரத்தில் பரவலாக பேச்சு எழுந் தது. கடந்த ஆண்டு நடைபெற்ற பட்டமளிப்பு விழாவிலும் இணை வேந்தரான எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் பங்கேற்காமல் புறக்கணித் தார். இந்த ஆண்டு நடைபெற்ற பட்டமளிப்பு விழாவினையும் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.