உதகை, ஜூலை 27- உதகை அருகே சுருக்கு கம்பியில் சிக்கி சிறுத்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம், உதகை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் அடர்ந்த வனப்பகுதியை கொண்டது. இந்த வனப் பகுதியில் புலி, சிறுத்தை, காட்டெருமை, யானை உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. கடந்த சில நாட்களாக வனத்தில் இருந்து வெளியேறும் வனவிலங்குகள் அவ்வப் போது குடியிருப்புகளின் அருகே உலா வருவது வாடிக்கை யாக உள்ளது. இந்நிலையில், உதகை அருகே மந்தடா பகுதி யில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் சிறுத்தை உயிரி ழந்த நிலையில் கிடந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி பழங் குடியின மக்கள் நீலகிரி வடக்கு வனச்சரக வனத்துறைக்கு தக வல் தெரிவித்தனர். இதன்பேரில் நீலகிரி மாவட்ட வன அலுவ லர் சச்சின் துக்கா ராம் போஸ்லே,
உதவி வன அலுவலர் சரவ ணன் மற்றும் முதுமலை கால்நடை மருத்துவர் ராஜேஷ் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து, ஆய்வு மேற்கொண்ட னர். அப்போது, சிறுத்தை சுருக்கு கம்பியில் சிக்கி உயிரிழந் தது தெரியவந்தது. இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், தேசிய புலி கள் பாதுகாப்பு ஆணையத்தின் நிலையான செயல்பாட்டு நடைமுறையின்படி, சிறுத்தையின் உடல் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. பொதுவாக விவசாய நிலங்களில், காட்டுப் பன்றி, முயல் உட்பட விலங்குகள், பயிரை சேதப்படுத்து வதை தவிர்க்க, சுருக்கு கம்பி வேலிகளை அமைத்துள்ள னர். மேலும், வேட்டைக்காகவும் சுருக்கு கம்பி பயன்படுத் தப்படுகிறது. விலங்குகளுக்கு சுருக்கு கம்பி வேலி வைப்பது சட்டப்படி குற்றமாகும். இதுகுறித்து வழக்குப்பதிவு செய் யப்பட்டுள்ளது, என்றனர். இந்நிலையில், சிறுத்தை இறந்து கிடந்த இடத்தின் அருகே மான் ஒன்று இறந்த நிலையில் புதைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சிறுத்தை மற்றும் மானின் உடல் பாகங்கள் பரிசோதனைக்காக சேகரிக்கப்பட்டு, இறந்த சிறுத் தையின் உடல் எரியூட்டப்பட்டது.