districts

img

தொழிலாளர் நலத்துறை சட்டங்களை திருத்தக்கூடாது உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கை

தொழிலாளர் நலத்துறை சட்டங்களை திருத்தக்கூடாது உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  மத்திய தொழிற்சங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், திருச்செங் கோடு அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ஏஐடியுசி மாவட்டத் தலைவர் என்.ஜெய ராமன், சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.அசோகன், எச்எம்எஸ் மாவட்டத் தலைவர் ஏ.கலைவாணன், ஏஐசி சிடியூ மாநிலச் செயலாளர் ஏ.சின்னுசாமி, சிஐடியு தொழிற்சங்க மாவட்டச் செயலாளர் என்.வேலுச்சாமி, விவசாய சங்க மாவட்டத் தலைவர் அன்புமணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.