districts

img

மீண்டும் நீருக்கடியில் மூழ்கியது காந்தையாற்று பாலம்

மேட்டுப்பாளையம், ஜூலை 19- மேட்டுப்பாளையம் அருகே உள்ள காந்தையாற்று பாலம் தற் போது மீண்டும் நீருக்குள் மூழ்கியது. இதனால், அப்பகுதி பொதுமக்கள் ஆபத்தான முறையில் பரிசல் பய ணம் மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாவட்டம், மேட்டுப் பாளையத்தை அடுத்துள்ள சிறு முகை பகுதியான லிங்காபுரம் மற் றும் காந்தவயல் கிராமங்களுக்கு இடையே காந்தையாறு செல்கிறது. நீலகிரி மலைப்பகுதியிலிருந்து வரும் மழைநீர் இந்த ஆற்றின் வழி யாக பவானியாற்றில் கலக்கிறது. காந்தையாற்றின் மறுகரையில் உள்ள காந்தவயல், காந்தையூர், உளியூர், மொக்கைமேடு உள்ளிட்ட மலையடிவார கிராமங்களில் வசிப் போர் நகர பகுதிகளுக்கு சென்று வர பரிசல் பயணத்தையே நம்பியிருந்த னர். இந்நிலையில், கடந்த 2005 ஆம் ஆண்டு காந்தையாற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டது. பவானிசாகர் அணையின் நீர்தேக்க பகுதியில் அமைந்துள்ள இவ்விடத்தில் மழைக் கால நீர்வரத்தை கவனத்தில் கொள் ளாமல் இப்பாலம் கட்டப்பட்டதால், பவானியாற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு பவானிசாகர் அணையின் நீர் மட்டம் 97 அடியை கடந்தாலே இந்த பாலம் நீருக்கடியில் மூழ்கி விடு வது வழக்கமாகிவிட்டது. பாலம் கட்டப்பட்டது

முதல் தற் போது வரை 10க்கும் மேற்பட்ட முறை  பாலம் நீருக்கடியில் மூழ்கியுள்ளது. நீருக்குள் மூழ்கும் இப்பாலம் மாதக் கணக்கில் வெளியில் தெரியாது. பாலம் மூழ்கினால் இதன் வழியே நடைபெற்று வந்த போக்குவரத்து தடைபட்டு பரிசல்களிலேயே மலைக் கிராம மக்கள் பயணித்து வரும் அவல நிலை தொடர்கிறது. தற்போது நீர்ப் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக பவானியாற்றில் நீர்வரத்து அதிகரித்து, அணையின் நீர்மட்டமும் உயர்ந்து விட்டதால்  மீண்டும் காத்தையாற்று பாலம் மூழ்கி யுள்ளது. இதனால் நான்கு கிராமங் களை சேர்ந்த மக்களுக்கு போக்கு வரத்து தடைபட்டு தவித்து வருகின்ற னர். கல்வி கற்க செல்லும் மாணவர் கள், பணிக்கு செல்வோர், விவசாயி கள், மருத்துவ தேவை உள்ளோர் என மீண்டும் அச்சத்தோடு பரிசல் பய ணத்தை துவக்கியுள்ளனர். இதற்கிடையே பாலத்தை உயர்த்தி கட்டி தருமாறு அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, விரை வில் காந்தையாற்றின் பாலம் உயர்த்தி கட்டப்படும் என்றும், இதற் கான முதற்கட்ட பணிகள் துவங்கி யுள்ளதாகவும் தெரிவித்தனர்.