districts

img

மாணவர், மாதர், வாலிபர் சங்கம் ஆட்சியரிடம் முறையீடு

கோவை, நவ.23- துடியலூர் அசோகபுரம் அரசு பள்ளி மாணவிக்கு ஆசி ரியர்கள் மனஉளைச்சலை ஏற்படுத்திய விவகாரத்தில், ஆட்சியர் தலையிட்டு விசா ரணை நடத்த வேண்டும் என மாணவர், மாதர், வாலிபர் சங்கத்தினர் வலியுறுத்தியுள் ளனர்.  முன்னதாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந் திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட சங் கங்களின் நிர்வாகிகள் அளித்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது, கோவை மாவட்டத் தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி கள் பெருமளவில் செயல்பட்டுக் கொண்டி ருக்கிறது. இந்நிலையில், துடியலூர் அசோக புரம் அரசு உயர் நிலைப்பள்ளியிலும், ஆசிரி யர்கள் மாணவிக்கு மன உளைச்சலை ஏற் படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது.  மாணவர்கள் சரியாக படிக்கவில்லை என்று காரணம் கூறி அவர்களை ஒதுக்கி அவர்களை மற்ற மாணவர்கள் மத்தியில் மட் டமாக பேசுவது, கடுமையாக திட்டுவது என்ப தும் நடைபெறுகிறது. பின்தங்கிய மாணவர் களிடம் ஆசிரியர்கள் மிகவும் பணிவாக கனிவு டன் நடந்து அவர்களுக்கு நல்வழி காட்டி  வருங்கால சமூகத்திற்கு உருவாக்கி தர வேண் டும். ஆனால், மாணவர்களை கடுமையான சொற்களால் பேசுவதன் மூலம் எந்தத் தீர் வும் வராது. கோவை அசோகபுரத்தில் மாண வியரிடம் கடுமையாக நடந்து கொண்ட ஆசிரி யர்கள் மற்றும் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியர் மீது  உரிய சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பள்ளி மாணவியின் கல்வியை  உறுதி செய்ய வேண்டும். ஆசிரியர்களுக்கு  மாணவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண் டும் என்ற உரிய வழிகாட்டுதல் தர வேண் டும் என வலியுறுத்தி உள்ளனர்.