கோவை, மே 26- கோவை கொடிசியா வாளகத்தில், ஜூன் 2 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை, 19 ஆவது சர்வதேச இயந்திர மற்றும் பொறியியல் தொழில் கண்காட்சி நடை பெற உள்ளது. இதுதொடர்பாக, கொடிசியா தலைவர் ரமேஷ்பாபு வியாழனன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, கோவையில் இன்டெக் 2022 என்ற 19 ஆவது சர்வதேச இயந்திர மற்றும் பொறியியல் தொழில் கண்காட்சி நடைபெற உள்ளது. இந்த கண்காட்சி ஜூன் 2 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதுவரை 400 ஸ்டால்கள் முன்பதிவு செய் யபட்டுள்ளன. கொரோனா தொற்றை கடந்து வந்த பின் நடைபெறும் முதல் கண் காட்சி இது. 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கண்காட்சி நடைபெற உள்ளது. இக்கண் காட்சியின் தலைவர் ராமச்சந்திரனும், துணைத் தலைவர் பொன்னுசாமி இருவரும் இதனை முறைப்படுத்தி உள்ளனர். மொத் தம் 488 ஸ்டால்கள் அமைக்கப்பட உள்ளன. புதிய தொழில் முனைவோர்களை ஊக்கு விக்கும் வகையில் புதிய கண்டுபிடிப்புகள் இந்த கண்காட்சியில் இடம் பிடிக்க உள் ளன. இவ்வாறு அவர் கூறினார்.