திருப்பூர், ஜூலை 29 – மணிப்பூர் மாநிலத்தில் நடந்து கொண்டு இருக்கும் மனித மாண்பற்ற செயலை கண்டித்து இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப் பாட்டம் காங்கேயத்தில் நடைபெற்றது. காங்கயம் நகர பேருந்து நிலையத்தில் சனியன்று தமுஎகச தாலுகா செயலாளர் க.காளியப்பன் தலைமையில் நடை பெற்றது. இதில் இந்திய மாணவர் சங்க கல்லூரி கிளைச் செய லாளர் இசக்கி.மாரி, மாணவர் சங்கத்தைச் சேர்ந்த ந.சௌபர் னிகா, காங்கேயம் கிளைத் தலைவர் ஆர்.எஸ்.மோகன குரு, சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர் கே.திருவேங்கடசாமி, வாலிபர் சங்க மாவட்டப் பொருளாளர் கு.பாலமுரளி, மாண வர் சங்க மாவட்டச் செயலாளர் பிரவீன் ஆகியோர் உரையாற் றினர். திரளானோர் கலந்து கொண்டனர். இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த சரிகா நன்றி கூறினார்.