districts

திடீரென பெய்த மழையால் வெப்பம் தணிந்தது

கோவை, ஏப்.22- தமிழ்நாட்டில் கோடை வெப்பம் அதி கரித்து வரும் நிலையில், சனியன்று பெய்த மழையால் பல்வேறு பகுதிக ளில் வெப்பம் தணிந்து, குளிர்ச்சி நிலவு கிறது. கோவை மாவட்டம், வால்பாறை மற் றும் அதனையொட்டிள்ள எஸ்டேட் பகு திகளிலும் சனியன்று சுமார் அரை மணி நேரம் கன மழை பெய்தது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்ப தால், அரை மணி நேரம் பெய்த மழை யால் குளிர்ச்சி நிலவுகிறது. இதனால் மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந் துள்ளனர். மேலும், வால்பாறை காமரா ஜர் நகர் பகுதியில் புதிதாக அமைக் கப்பட்டுள்ள நெடுஞ்சாலை தடுப்புச் சுவர் வழியாக அப்பகுதியில் உள்ள  மழை நீர் தடுப்புச் சுவர் ஓரமாக பெருக் கெடுத்து ஓடுவதால் சாலைகளிலும் தண்ணீர் அதிக அளவில் சென்றது. இத னால் சாலையில் வரும் வாகனங்கள் இடவசதியின்றி மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். கடந்த ஒரு வார காலமாக மதியம் 2 மணி அளவில் பெய்கின்ற  மழை, தேயிலை பயிர்களுக்கு ஏற்ற தாக காணப்படுகிறது. இதனால் தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ளது.

கோத்தகிரியில் மழை

இதேபோல நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதி களில் கடந்த சில நாட்களாக பகல் நேரங் களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வந்தது. இந்நிலையில் வெள் ளியன்று உதகை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை மழை பெய்தது. இதனால் காலநிலையில் மாற்றம் ஏற் பட்டு குளிர்ந்த காலநிலை நிலவி வருகி றது. இதனைத்தொடர்ந்து சனியன்று காலை முதலே கோத்தகிரி அதன்  சுற்றுவட்டார பகுதிகளான கட்டபெட்டு, அரவேனு, கீழ் கோத்தகிரி உள்ளிட்ட பகு திகளில் வெயிலின் தாக்கம் குறைந்து  இதமான காலநிலை நிலவி வருகிறது. மேலும், மழையால் மலை காய்கறிகள் மற்றும் தேயிலை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கனமழை; பயிர்கள் சேதம்

தற்போது கோடை காலம் என்பதால் கடந்த சில மாதங்களாக கோடை வெயி லில் தாக்கம் சுட்டு எரித்து வந்த நிலை யில், விவசாய பயிர்கள் கருகும் நிலை  ஏற்பட்டது. இந்நிலையில், சேலம் மாவட் டம், ஆத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட கீரிப்பட்டி, கீழ்கணவாய் உள்ளிட்ட பகு திகளில் வெள்ளியன்று வானம் மேக மூட்டத்துடன் குளிர்ந்த காற்று வீசி வந்த நிலையில், மாலையில் திடீரென சூறைக் காற்றுடன் ௯டிய கனமழை ஒரு மணி  நேரமாக  பெய்துள்ளது. இதனால் நூற் றுக்கணக்கான ஏக்கரில் அறுவடைக்கு வரும் நேரத்திலிருந்த நெல், வாழை உள்ளிட்ட பயிர்கள், சூறைக்காற்றுடன் பெய்த கனமழை காரணமாக சேதம டைந்தன. இதனால் பெருத்த நட்டம் ஏற் பட்டுள்ளதால், சேதமடைந்த பயிர்க ளுக்கு தமிழ்நாடு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அப்பகுதி விவ சாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மரத்தை பிளந்த மின்னல்

ஏற்காடு சுற்றுவட்டார பகுதிகளில் சனியன்று மதியம் மேக மூட்டத்துடன், லேசான சாரல் மழை பெய்தது. இதில்,  ஏற்காடு அருகே உள்ள அரங்கம் எனும்  மலை கிராமத்தில் மெய்யான என்பவ ருக்கு சொந்தமான காப்பி தோட்டத்தில் இடி இறங்கியது. அது மரத்தை பிளந்து கொண்டு, பாறையை உடைத்து, பெரிய பள்ளத்தை உண்டாக்கியது. இடி இறங் கியபோது தோட்டத்தில் யாரும் இல்லா ததால் எந்தவித பாதிப்பும் ஏற்பட வில்லை.

மின்னலால் எஸ்டேட்டில் தீ

குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதி களில் பலத்த இடி, மின்னல் காணப்பட் டது. ஆனால், மழை பெய்யவில்லை. தொடர்ந்து இடி, மின்னலின் சத்தம் அதி கமாகவே இருந்தது. அப்போது, தனியா ருக்கு சொந்தமான அந்த எஸ்டேட்டில் பயங்கர வெடி சத்தத்துடன் மின்னல் தாக்கியது. சிறிது நேரத்தில் அப்பகுதி யில் இருந்த மரங்கள், செடிகள் அனைத் தும் தீ பிடித்து எரிய தொடங்கின. இத னால் அப்பகுதியே புகைமூட்டமாக  காணப்பட்டது. இதைக்கண்டு அச்சம டைந்த அப்பகுதி பொதுமக்கள், தோட் டத்திலிருந்து மோட்டார் மூலம் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.