உதகை, டிச.20- ஜிஎஸ்டி சட்டத்தில் கொண்டு வரப்படும் தொடர் மாற்றங்கள் அனைத்தும் கார்ப்பரேட் நிறுவ னங்களுக்கு ஆதரவாக உள்ளன. இதனால், வணிகம் பாதிக்கப்பட்டு, அதை சார்ந்துள்ள சாமானிய மக்க ளுக்கு வேலை இழப்பு அபாயம் ஏற் பட்டுள்ளது என வணிகர் சங்கங் களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா தெரிவித் தார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நீலகிரி மாவட்ட தலைமை அலுவலக திறப்பு விழா உதகை பிங்கர்போஸ்டில் நடை பெற்றது. இதில், வணிகர் சங்கங் களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா கலந்துக் கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்து, சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். இதன்பின் அவர் செய்தியாளர் களிடம் கூறுகையில், சட்ட விதிகளை கடைப்பிடிப்பது குறித்து வணிகர் களிடம் தெளிவை ஏற்படுத்த அலுவ லகம் அமைக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கோத்தகிரி நகராட்சிக்கு சொந்த மான மார்க்கெட்டில் உள்ள கடை களின் வாடகை பிரச்சனையை தீர்க்க நகராட்சி, உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் வணிகர்கள் அடங்கிய வாடகை சீரமைப்புக்குழு தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட் டுள்ளது. இந்த குழு வாடகையை சீரமைத்து நிர்ணயக்கும்.
அது வரை ஆட்சியர், ஆணையர்கள் உயர்த் தப்பட்ட வாடகையை வியாபாரிகள் செலுத்த நிர்பந்திக்கக்கூடாது. கடை களுக்கு சீல் வைக்கும் நடவடிக் கையை தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக் தடை சட்டம் பார பட்சமாக உள்ளது. அரசு தடை செய் துள்ள 19 வகையான பிளாஸ்டிக் பொருட்களை வியாபாரிகள் விற்கக் கூடாது. இந்த வகை பிளாஸ்டிக் பொருட்கள் மறுசுழற்சி செய்யலாம். ஆனால், பெரு நிறுவனங்கள் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் கவர்களின் பொருட் களை விற்க அனுமதி அளிக்கப்பட் டுள்ளது. இந்த பிரச்சனையால் உள் நாட்டு வணிகம் அழிந்து வருகிறது. உள்நாட்டு வணிகத்தை பாது காக்கும் வகையில் இந்த சட்டத்தில் உரிய மாற்றம் கொண்டு வர வேண்டும். உணவு பாதுகாப்பு சட்டங் கள், ஜிஎஸ்டி சட்டத்தில் தொடர் மாற்றங்கள் கொண்டு வரப்படு கின்றன. இவை பெரும் நிறுவனங் களுக்கு ஆதரவாக உள்ளன. பிரத மரும், முதல்வரும் உரிய உள் நாட்டு வணிகத்தை பாதுகாக்க வேண்டும். வணிகத்தை சார்ந்து 1 கோடி பேர் உள்ளனர். இந்த பிரச் சனை தொடந்தால் 10 ஆண்டு களில் இவர்கள் வாழ்வாதாரம் அற்று போய்விடும். இதனால், வேலை வாய்ப்பின்மை அதிகரிக்கும் அபாயம் ஏற்படும், என்றார்.