districts

img

விடுதலைப்போராட்ட வீரர்களை நினைவு கூற ஆளுநருக்கு அருகதையில்லை

கோவை, செப்.30- விடுதலைப் போராட்டத்தை காட்டிக் கொடுத்த ஆர்எஸ்எஸ் அமைப்பின், பிரச்சாரகராக உள்ள  ஆளுநர் ரவி சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவுகூர்வது அருகதையற்றது என சிபிஎம்  மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் குற்றம்சாட்டினார். கோவை காந்திபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழு அலுவலகத்தில் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர் களை சந்தித்தார்.  அப்போது செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்து பேசு கையில், அக்டோபர் 2 ஆம் தேதி  விடுதலை போராட்ட தியாகி களுக்கு மரியாதை செலுத்த தமிழக  ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். ஆர்எஸ்எஸ் பிரச்சாரகரான ஆளு நருக்கு, விடுதலை போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்த எந்த அருகதையும் இல்லை. சுதந் திர போராட்டத்தில் இறுதிவரை யில் எந்த பங்கையும் ஆர்எஸ்எஸ்  செலுத்தவில்லை என்பது மட்டு மல்லாமல், இவ்வமைப்பின் தலை வர் சாவர்க்கர் மன்னிப்பு கடிதம் எழுதிக்கொடுத்து, பிரிட்டிசாருக்கு விசுவாசமாய் இருப்போம் என உறுதியளித்தவர். அத்தகைய அமைப்பின் பிரச்சாரகராக உள்ள ஆளுநர் விடுதலை போராட்ட வீரர் களுக்கு மரியாதை செலுத்த எந்த  அருகதையும் கிடையாது.  பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் நடைப் பயணப் பிரச்சாரம் பாஜகவுக்கு இறுதி யாத்திரை என ஏற்கனவே கூறினேன்.  அது நடந்து வருகிறது. அதிமுக, பாஜக கூட்டணியை முறித்து உள்ளது. அதிமுக உட னான கூட்டணி முறிவால் பாஜக  நிலைகுலைந்துள்ளது. அண்ணா மலையின் யாத்திரை முடிவ தற்குள் என்னென்ன முறிவு ஏற்படு மோ என தெரியவில்லை. பாஜக தேசிய தலைமை அண்ணாமலை மூலம், அவர்களுக்கு அவர்களே சவக்குழிக்கு  அனுப்பும் வேலை யை செய்து வருகின்றனர். ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை தருவோம் என மோடி வாக்குறுதி அளித்தார். கடந்த  9 ஆண்டுகளில் 75 ஆயிரம்  பேருக்கு தான் வேலை கொடுத்து  உள்ளனர். தமிழகம் போன்ற மாநிலங்களிலேயே ஆண்டுக்கு 50 ஆயிரம் இலக்கு நிர்ணயித்து வேலை வழங்குகிறார்கள். கேரளத் தில் சில லட்சம் பேருக்கு வேலை வழங்கப்படுகிறது. ஆனால், இவ் வளவு பெரிய நாட்டில் 10 ஆண்டு களில் 75 ஆயிரம் பேருக்குத்தான் மோடியால் வேலை கொடுக்க முடிந்துள்ளது என்பது வெட்கக் கேடானது.  திமுக கூட்டணியில் உள்ள கட்சி கள் அதிமுக கூட்டணிக்கு செல்ல  வாய்ப்பு அறவே இல்லை. இது  கனவுலகில் இருந்து கதை எழுது வது போல உள்ளது. இந்தியா கூட்டணியில் கொள்கை ரீதியாக இணைந்து இருக்கிறோம். இந்தியா கூட்டணி வெல்லும், தமிழ கத்தில் மக்கள் செல்வாக்கு பெற்ற  முதல் நிலை கூட்டணி திமுக கூட்டணி தான். 

என்ஐஏவின் விசாரணை எல்லை தாண்டி செல்கிறது. சிறு பான்மை மக்களை பழிவாங்கும் வகையில் நூற்றுக்கணக்கான இளைஞர்களை சிக்க வைக்க  முயற்சி நடக்கிறது. கார் குண்டு  வெடிப்பு சம்பவத்தில், கைது  செய்யப்பட்டுள்ளவர், அரபிக்  கல்லூரியில் படித்தார் என்பதற் காக அந்த பள்ளியில் படத்தவர்கள் எல்லோரது வீட்டிற்கும் சென்று  சோதனை என்கிற பெயரில் என்ஐஏ  நெருக்கடி கொடுப்பது ஏற்பு டையது அல்ல. தேவையென்றால் என்ஐஏவிற்கு எதிராக மக்களை  திரட்டி மார்க்சிஸ்ட் கட்சி போராட் டத்தில் ஈடுபடும் என்றார்.  மாநிலத்தில் அரசியல் செல் வாக்கை பயன்படுத்தி அரசு நிலங் களை பினாமி பேரில் பலர் வாங்கி  உள்ளனர். சமீபத்தில் இது தொடர் பான உயர்நீதிமன்ற தீர்ப்பில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம், பாஜக கோவை  மாவட்டத் தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி ஆகியோர் உச்ச வரம்பு மீறி நிலம் வாங்கியது தெரிய வந்துள்ளது. இதனை நீதிமன்றம் கண்டித்து, நிலத்தை மீட்பதோடு, குற்றவியல் வழக்கு பதிவு செய்து  நடவடிக்கை எடுக்க வேண்டும் என  தெரிவித்துள்ளது. அதிமுக எம்எல்ஏ ஜெயராமன், பாஜக மாவட்டத் தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி மற்றும் இவர் களுக்கு உறுதுணையாக இருந்த  அதிகாரிகள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏழை, எளிய மக்கள் குடியிருப்பு களை ஏதேதோ காரணம் சொல்லி இடித்து அப்புறப்படுத்தும் அரசு,  அரசியல் செல்வாக்கு உள்ள நபர் களை இதுவரை கைது செய் யாமல் இருப்பது நியாயமல்ல.  மேலும், சென்னை பாஜக அலு வலக தலைவர் வீட்டில் ரெய்டு நடந்தது. மற்ற இடங்களில் வரு மானவரித்துறை சோதனை நடை பெறுகையில் யாரையும் உள்ளே  செல்ல அனுமதிக்காத அதிகாரி கள், பாஜக தலைவர் வீட்டில் நடந்த  சோதனையின் போது  பாஜக தலை வர்களை உள்ளே அனுமதித்தது எப்படி, அவர்கள் உள்ளே சென்று பேசிய பிறகு வருமானவரித்துறை அதிகாரிகள் வெளியேறுகின்றனர். இது தவறான செயல். ஏன்  பாஜகவை கண்டு அதிகாரிகள்  பம்ப வேண்டும், பாஜகவின் இளை ஞரணியாக வருமானவரித்துறை செயல்படுகிறது என்றார்.  முன்னதாக இந்த பேட்டியின் போது, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் என்.குணசேகரன், ஜி.சுகுமாறன் மற்றும் மாவட்டச் செயலாளர் சி. பத்மநாபன், கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நட ராஜன் உள்ளிட்டோர் உடனிருந் தனர்.