districts

img

144 தடை உத்தரவு தளர்வு நடவடிக்கையாக இன்று முதல் 30 சதவீத ஊழியர்களுடன் தொழிற்சாலைகள் இயங்க அரசு அனுமதி

கரூர், மே 5-  கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக 144 தடை உத்தரவு தற்போது அமலில் உள்ளதால், தமிழக அரசின் உத்தரவின்படி எந்தெந்த துறை களுக்கு தளர்வுகள் அளிக்கலாம் என்பது குறித்து கரூர் மாவட்டத்தில் உள்ள வர்த்தகர் சங்கம், ஆயத்த ஆடை உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளர் சங்கம், பேருந்து கட்டுமானம், சிறு.குறு தொழில் முனைவோர் கூட்டமைப்பி னர் உள்ளிட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளு டன் ஆய்வுக்கூட்டம் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஆட்சியர் த.அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.   இதன்பின் போக்குவரத்துத் துறை அமைச்சர், செய்தியாளர்களிடம் தெரிவித்த தாவது, தற்போதைய சூழலில் நோய் தொற்று பரவாமல் உரிய தற்காப்பு நடவடிக்கைகளை எடுத்து, ஏழை, மக்களுக்கு வேலை வாய்ப்பை உறுதிப்படுத்த வேண்டும், தொழிற்சாலைகள் இயங்க வேண்டும் என்ற நோக்கத்தில் 144 தடை உத்தரவில் இருந்து சில தளர்வுகளை முதலமைச்சர் வழங்கியுள்ளார்கள். சில கட்டுப்பாடுகளை விதித்து, அவற்றை முழு மையாக கடைபிடித்து தொழிற்சாலைகள் இயக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்கள். 

அதனடிப்படையில், கரூர் மாவட்டத்தில மே 6 முதல் நகரப் பகுதியில் இருக்கக் கூடிய வர்த்தக நிறுவனங்கள், உற்பத்தி சம்பந்தப் பட்ட தொழிற்சாலைகள் 30 சதவீத ஊழியர்க ளுடனும், ஊரகப் பகுதிகளில் உள்ள தொழிற் சாலைகள் 50 சதவீத ஊழியர்களுடனும் இயக்கப்பட அனுமதியளிக்கப்படும். பணிபுரி யும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தொழிற்சாலைக்கு வரும் அனைவருக்கும் கைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட வேண்டும். முகக்கவசம் வழங்கப்பட வேண்டும். தொழிற்சாலைக்குள் கண்டிப்பாக சமூக விலகல் கடைபிடிக்கப்பட வேண்டும். ஊழி யர்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்களே தங்கள் பேருந்துகளில் அழைத்து வர வேண்டும். பேருந்துகளில் அழைத்து வரும் போதும் சமூக விலகல் கடைபிடிக்க வேண்டும். 50 வயதிற்கு அதிகமான நபர்களை வேலை யில் ஈடுபடுத்தக் கூடாது என்று அரசு அறி வித்துள்ளது. வர்த்தக நிறுவனங்களில் வேலை செய்யும் நபர்களுக்கு புகைப்படத்து டன் கூடிய அடையாள அட்டை வழங்க நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாகனங்களுக் கான அனுமதி பெறுவதற்கு tnÃass.tbega.Hrg என்ற இணையதளத்தில் விண்ணப் பிக்க வேண்டும். 

மாவட்டத்தில் உள்ள ஆயத்த ஆடை உற்பத்தி, கொசுவலை உற்பத்தி, பேருந்து கட்டுமானம் போன்ற அனைத்து தொழிற் சாலைகளும் குறைந்த அளவிலான வேலை யாட்களை வைத்து இயக்க வேண்டும். நகைக்கடை, துணிக்கடை, முடிதிருத்தகம், டீக்கடை, இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் ஷோரூம் உள்ளிட்டவை நடத்த அனுமதி இல்லை.  பிளம்பர், எலக்டிரிஷியன், ஏ.சி.மெக்கா னிக் உள்ளிட்ட சுயதிறன் பணியாளர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெற்ற பிறகே பணிபுரிய அனுமதிக்கப்படுவர். கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான ஹார்டுவேர், சிமெண்ட், கட்டுமானப் பொருட்கள், மின் சாதன விற்பனைக் கடைகள்  காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை  மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.  கணிப் பொறி, கண் கண்ணாடி, மின் மோட்டார் பழுது நீக்குதல், வாகனங்கள் பழுது நீக்குதல் உள்ளிட்ட தனிக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.

உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை  பார்சல் மட்டும் வழங்கலாம். தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு மேற்சொன்ன தளர்வுகள் பொருந்தாது. அங்கு ஏற்கனவே உள்ள நடை முறைகள் தொடரும். நகர்ப்புறங்களில் உள்ள மால்கள், வணிக வளாகங்களுக்கு அனுமதி இல்லை. அரசின் உத்தரவினை முழுமை யாகப் பின்பற்றாமல் தொழிற்சாலைகள் இயக்கப்படுவது கண்டறியப்பட்டால் அவை பூட்டி சீல் வைக்கப்படும் எனக் கூறினார்.