ஈரோடு, பிப்.22- பஞ்சாலையில் வேலை செய்து கொண் டிருந்த நேரத்தில், விபத்தில் சிறுமியின் கை விரல்கள் துண்டாகின. இதுகுறித்து போலீசில் புகார் அளிக்க சென்றபோது புகாரை ஏற்க மறுத்த நிலையில், மார்க் சிஸ்ட் கட்சி தலையீடு செய்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, அம்மையன்புரத்தைச் சேர்ந்த ரெங்கசாமி மகள் ராஜேஸ்வரி (19). ஈரோடு, மொடக்குறிச்சி வட்டம், தாண்டாம்பா ளையத்திலுள்ளது செல்வக்குமார் ஸ்பின் ்னர்ஸ் பி.லிட் என்ற பஞ்சாலையில், ராஜேஸ் வரி உள்ளிட்ட 5 சிறுமிகள் கடந்த 2017ஆம் ஆண்டு வேலைக்கு சேர்க்கப்பட்டனர். ஆலை வளாகத்திலேயே விடுதி அமைத்து தங்க வைக்கப்பட்டு வேலை வாங்கப்பட்டு வந்தனர். இந்நிலையில், கடந்த மாதம் 31ஆம் தேதி யன்று இரவு நேர பணிக்கு அழைக்கப்பட்ட ராஜேஸ்வரி புளூரூம் வேலையையும் சேர்த்து செய்ய வேண்டும் என நிர்பந்திக் கப்பட்டார். இந்த, பழுதடைந்த இயந்தி ரத்தில் ராஜேஷ்வரியின் கை உள்ளிழுக் கப்பட்டு நசுங்கியது. இதனையடுத்து, ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு நான்கு விரல்கள் அகற் றப்பட்டது.
இதுகுறித்து எந்த வழக்கும் தொடுக்க வேண்டாம், புகார் செய்ய வேண்டாம், அனைத்து உதவி, தேவைகளை செய் கிறேன் என ஆலை உரிமையாளர் கேட்டுக் கொண்டதால், காவல்துறைக்கு எந்த தக வலும் கொடுக்கவில்லை. ஆனால் அவர் அளித்த வாக்குறுதிப்படி எந்த உதவியும் செய்யவில்லை. எனவே, கடன் வாங்கி மருத்துவ செலவுகளை செலுத்தி டிஸ் சார்ஜ் ஆனவர் காவல் நிலையம் சென்றார். ஆனால், காவல் துறையினர் வழக்கு பதிவு செய்யவில்லை. பின்னர், அலைக்கழிக் கப்பட்ட சிறுமி மற்றும் அவரது உறவி னர்கள் மார்க்சிஸ்ட் கட்சியிடம் முறையிட் டனர். இதனையடுத்து, மார்க்சிஸ்ட் கட்சி தலையீடு செய்த பிறகு சிவகிரி காவல் நிலை யத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் பல இடங்களில் இதுபோன்று சிறுமிகளை அடைத்து வைத்து வேலை வாங்கப்படுவதும், விபத்து, மரணம் ஏற்பட்டால் அதனை மூடி மறைப்பதும் தொடர் நிகழ்வாக இருக்கிறது. மாவட்ட நிர்வாகம், தொழிலாளர் நலத்துறை இதுபோன்ற நிறு வனங்களை கண்காணித்து உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.