உதகை, ஜூன் 12- லாங்வுட் சோலை பகுதியில் வன ஆராய்ச்சி நிலையம் அமைக் கப்படும் என தமிழக வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தெரி வித்துள்ளார். தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில், பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.17.36 கோடி மதிப்பீட்டில், கட்டி முடிக்கப் பட்ட 204 வீடுகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். உதகையில் உள்ள நீலகிரி மாவட்ட கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் நடை பெற்ற இந்நிகழ்ச்சியில், வனத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் 4 பயனாளிகளுக்கு தனி குடியி ருப்புக்கான ஒதுக்கீடு ஆணையை யும், தலா ரூ.2.10 லட்சம் மதிப்பீட் டில் மானியத்துடன் பயனாளிகளே சுயமாக வீடுகட்டும் திட்டத்தின் கீழ் 20 பேருக்கு பணி ஆணையையும் வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்க ளிடம் கூறுகையில், தமிழ கத்தை பசுமையாக்கல் திட்டம் மற்றும் 33 சதவிகிதம் வனப்பரப்பை உயர்த்தும் திட்டத்தின் கீழ் வருகிற 2030 ஆம் ஆண்டிற்குள் தமிழகம் முழுவதும் 261 கோடி மரங்கள் நடவு செய்ய திட்டமிடப்பட்டு உள் ளது.
இதற்காக தற்போது வனத் துறை உட்பட அனைத்து துறை களிலும் மரக்கன்றுகள் நாற்று உற்பத்தி தொடங்கப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக 2022-23 ஆம் ஆண் டிற்குள் 2.5 கோடி மரக்கன்றுகள் நடவு செய்யப்படும். சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் வனத்துறை சார்பில் 1.73 கோடி மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளன. மீதமுள்ள நாற்றுகள் மற்ற துறை களை கொண்டு உற்பத்தி செய்து நடவு செய்யப்படும். மேலும், தமிழ கத்தில் 8 இடங்களில் புதிதாக சூழல் சுற்றுலா உருவாக்கப்பட உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி அருகே உள்ள கேத்த ரின் நீர்வீழ்ச்சி பகுதியில் புதிதாக காட்சி கோபுரம், அலங்கார நடை பாதைகள் அமைப்பதற்கான நடவ டிக்கைகள் எடுக்கப்பட்டு வருகி றது. லாங்வுட் சோலை பகுதியில் வன ஆராய்ச்சி நிலையம் அமைக் கப்படும் என அமைச்சர் கா.ராமச்சந் திரன் கூறினார். முன்னதாக, இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அம்ரீத், உதகை ஊராட்சி ஒன்றியத் தலைவர் மாயன், தமிழ்நாடு நகா்ப்புற வாழ் விட மேம்பாட்டு வாரிய உதவி செயற்பொறியாளர் சுதா்ஷன், உதவிப் பொறியாளர் விவேக் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரி கள் கலந்து கொண்டனர்.