ஈரோடு, ஜூலை 26- சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் 5 வயது மதிக்கத்தக்க ஆண் புலி உயிரிழந்து. இது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் புலிகள் அதிகளவில் உள்ளன. புலிகளை பாதுகாப்பதற்காக வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கை களை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பவானி சாகர் வனச்சரகம், கொத்தமங்கலம் வனப்பகுதியில் வனத் துறையினர் ரோந்து சென்றனர். அப்போது ஒரு வறண்ட நீரோடையில் துர்நாற்றம் வீசியது. இதையறிந்த வனத்துறை யினர் அப்பகுதியில் வனவிலங்குகள் ஏதாவது இறந்து கிடக்கிறதா? என தேடி பார்த்தனர். அப்போது உடல் அழுகிய நிலையில் புலி இறந்து கிடப்பதைக் வனத்துறையினர் கண்டு பிடித்தனர். இது குறித்து உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் கள இயக்குநர் ராஜ்குமார் அறிவுரையின் பேரில், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் துணை இயக்குநர் (பொறுப்பு) வெங்கடேஷ் முன்னிலையில், வனத்துறை கால்நடை மருத் துவர் சதாசிவம் புலியின் உடலை உடல் கூறாய்வு மேற் கொண்டார். இதில் உயிரிழந்த புலி ஐந்து வயது மதிக்கத் தக்க ஆண் புலி என தெரிய வந்தது. உடல் அழுகிய நிலை யில் உள்ளதால் இறப்புக்கான காரணத்தை அறிய புலியின் உடல் பாகங்கள் சேகரிக்கப்பட்டு ஹைதராபாத் உயிரியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஆய்வு முடிவுகள் தெரிந்த பின்னர் தான் புலியின் இறப்பிற்கான காரணம் தெரிய வரும் என வனத்துறை யினர் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து புலியின் உடலை வனத்துறை அதிகாரிகள் எரியூட்டினர்.