districts

img

கிராமத்திற்குள் புகுந்த யானை: விரட்டிய வனத்துறை

ஈரோடு, டிச.6- சத்தியமங்கலம் அருகே கிராமத்திற்குள்  புகுந்த காட்டுயானையை, வனத்துறையினர் 2 மணி நேரம் போராடி வனப்பகுதிக்குள் விரட்டினர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலி கள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. இரவு நேரத்தில் வனப்பகுதியை விட்டு வெளி யேறும் காட்டு யானைகள் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் புகுந்து, விளை பொருட்களை சேதப்படுத்துவது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள கெம்ப நாயக்கன்பாளையம் பெரும்பள்ளம் அணை  வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை ஆண் யானை, பட்டப்பகலில் கெம்ப நாயக்கன்பாளையம் வன சோதனைச்சாவடி அருகே கடம்பூர் சாலையை கடந்து சென்று  அப்பகுதியில் உள்ள விவசாயத் தோட்டங்க ளில் நுழைந்தது. அங்கு வாழை, கரும்பு,  வெங்காயம் உள்ளிட்ட பல்வேறு பயிர்களை சேதப்படுத்தியது. பட்டப்பகலில் காட்டு யானை விவசாய தோட்டத்திற்குள் நடமாடு வதை கண்ட அப்பகுதி விவசாயிகள் மற்றும் தோட்டத்தில் பணியில் ஈடுபட்டிருந்த விவ சாயக்கூலி தொழிலாளர்கள் அதிர்ச்சிய டைந்து அலறியடித்து ஓடினர். இதுகுறித்து உடனடியாக வனத்துறை யினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தக வல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து  சென்ற சத்தியமங்கலம் வனச்சரக ஊழியர் கள் மற்றும் டி.என்.பாளையம் வனச்சரக ஊழி யர்கள் இணைந்து சுமார் 2 மணி நேரம்  போராடி காட்டு யானையை வனப்பகுதிக் குள் விரட்டினர். யானை விவசாய தோட்டத் திற்குள் புகுந்ததால் ஆங்காங்கே சில இடங் களில் விவசாய பயிர்கள் சேதமடைந்தன. காட்டு யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறாமல் தடுக்க அகழி வெட்ட வேண் டும். ஏற்கனவே உள்ள அகழியை ஆழம் மற் றும் அகலப்படுத்த வேண்டும் என அப்பகுதி  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.