districts

img

மலைரயிலுக்கு நியமிக்கப்பட்டுள்ள முதல் பிரேக் வுமன்

உலக பாரம்பரம்பரிய சின்ன மான நூற்றாண்டு பழமை வாய்ந்த மலை ரயிலுக்கு முதன்முறையாக பிரேக் வுமனாக சிவஜோதி நியமிக்கப்பட்டுள்ளார். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து உதகை வரை நூற்றாண்டு பழமை வாய்ந்த நீலகிரி மலை ரயில் தினசரி இயக்கப்பட்டு வருகிறது. கடந்த 1899 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இம்மலை ரயில் போக்குவரத்து  2005 ஆம் ஆண்டு யுனஸ்கோ நிறுவனத்தால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது. செங்குத்தான மலை மீது பல்சக்கரங்கள் பொருத்தப்பட்ட இருப்பு பாதையில் ஊர்ந்து செல்லும் இம் மலை ரயிலில் பயணித்தபடி நீலகிரி மலையின் இயற்கை எழிலை கண்டு ரசிக்க உள்நாடு மட்டு மின்றி உலகின் பல்வேறு நாடுகளில் இருந் தும் சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். நான்கு பெட்டிகளுடன் இயக்கப் படும் மலைரயிலில் ஒவ்வொரு பெட்டிக்கு முன்பாகவும் ஒரு லீடிங் பிரேக்ஸ் மென் பணி யாற்றுவது வழக்கம். மலைரயிலை பொறுத்தவரை என்ஜின் பின்னிருந்து பெட்டிகளை மேல் நோக்கி தள்ளி செல்லும் என்பதால் பிரேக்ஸ் மென்கள் மலைரயில் பாதையில் கிடைக்கும் சிக்னலை என்ஜின் ட்ரைவருக்கு தெரிவிப்பது, அடர்ந்த மலைகாட்டின் நடுவே செல்லும் பாதை என்ப தால் இருப்பு பாதை மீது பாறைகளோ மரங் களோ விழுந்து கிடந்தால் அல்லது யானை  போன்ற விலங்கினங்கள் நின்றிந்தால் உடன டியாக எமர்ஜென்சி பிரேக்கை பயன்படுத்து வது போன்ற முக்கிய பணிகளை செய்வது இவர்களே. ஆசியாவிலேயே மிக செங்குத் தான மலை மீது பயணிக்கும் இந்த மலைரயில் சேவைக்கு பிரேக்ஸ் மென்கள் பணி என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இப் பணிக்கு இதுவரை ஆண்களே நியமிக்கப் பட்டு வந்த நிலையில் தற்போது முதல் முறை யாக பிரேக்ஸ் வுமனாக சிவஜோதி என்ற  பெண்மணியை நியமித்துள்ளது ரயில்வேத் துறை.  இவர் கடந்த எட்டு வருடங்களாக குன்னூர் கோச் மற்றும் வேகன் பிரிவில் பணியாற்றி வந் துள்ள நிலையில் தற்போது இப்பணிக்கு நியமிக்கபட்டுள்ளார். பாரம்பரிய மலைரயி லில் முதல் பிரேக்ஸ் வுமனாக தனது பணியை துவக்கியுள்ள சிவஜோதிக்கு மேட்டுப்பாளைய ரயில்நிலைய அதிகாரிகள் மற்றும் சுற்றுலா பய ணிகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். -இரா.சரவணபாபு, மேட்டுப்பாளையம்.