உடுமலை, ஜன.5- வனவிலங்கு பட்டியலியிருந்து காட்டுப்பன்றியை நீக்குமாறு, குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். உடுமலை, மடத்துக்குளம் தாலுகா பகுதிகளில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதி களில் நூற்றுக்கணக்கான கிரா மங்கள் உள்ளன. இக்கிராமங் களைச் சேர்ந்த விவசாயிகள் மக்காச்சோளம், மரவள்ளிக் கிழங்கு, வெங்காயம், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்,மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து இரவு நேரங்களில் காட்டுப் பன்றிகள் கூட்டம் கூட்டமாக வந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் மா, தென்னை விவசாயிகளும் கடும் பாதிப்புக்குள்ளாகின்றனர். இந்த காட்டுப்பன்றிகளை வனப்பகுதிக் குள் விரட்ட முடியாமல் திணறியும் வருகின்றனர். இதுகுறித்து காட்டுப்பன்றி களை கட்டுப்படுத்த வனத்துறை யினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் பல முறை கோரிக்கை விடுத்தனர். ஆனால் வனத்துறையும், மாவட்ட நிர்வாகமும் எந்தவொரு நடவடிக் கையும் எடுக்கவில்லை என கோட் டாச்சியர் தலைமையில் நடக்கும் விவசாய குறைதீர் கூட்டத்தில் தெரி வித்தனர். இந்நிலையில், நீண்ட இடை வெளிக்கு பின் உடுமலையில் உள்ள திருப்பூர் மாவட்ட வன அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் வியாழ னன்று மாவட்ட வன அலுவலர் தேஜஸ்வி தலைமையில் நடை பெற்றது. இக்கூட்டத்தில், பங்கேற்ற விவ சாயிகள் காட்டுப்பன்றிகளால் விளைப்பொருள்கள், விவசாயி கள், விவசாய தொழிலாளர்கள் மற்றும் கால்நடைகளுக்கு பெரும் சேதம் விளைவித்து வருகிறது. இதற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
வனத்துக்குள் இருந்து கூட்டமாக வரும் காட்டுப்பன்றி களை கட்டுப்படுத்த நிரந்தர தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதற்கு மாவட்ட வன அலுவலர் தேஜஸ்வி, காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த அரசுக்கு கோரிக்கை விடுத்த நிலையில், அது குறித்த அதிகாரிகள் கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கேரளாவை போன்று பன்றிகளை தகுதி வாய்ந்த நபர்களை கொண்டு சுடுவது அல்லது வனப் பகுதியில் இருந்து மக்கள் வசிப் பிடம் பகுதிக்கு பன்றிகளை வராமல் தடுப்பது பற்றி ஆலோ சனை நடைபெற்றது. மேலும், விளைநிலங்களை சுற்றியும் இயற்கை வேலி அமைப்பது அல்லது முள் வேலிகளை அமைக்க வேண்டும். மேலும், ரசா யனம் தெளித்தல், ரப்பர் வலை களை வேலியாக அமைத்தால் காட்டுப் பன்றிகள் நிலங்களைல் நுழைவதை கட்டுப்படுத்த முடியும் என்றார். மேலும், காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்தலாம் என அரசு ஆலோ சனை கூறி உள்ளதாகவும், இந்த வழிமுறைகளை விவசாயிகள் பரிசோதனை முறையில் பின்பற்றி காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த லாம் என கூறினார். இதற்கு விவசாயிகள் தரப் பினர், காட்டுப்பன்றிகள் மலை யோர கிராமங்கள் மட்டுமின்றி அருகில் உள்ள கிராமங்களில் உள்ள விளைநிலங்களுக்குள் வந்து சேதப்படுத்துகின்றன. எனவே, அண்டை மாநிலங்களில் உள்ளதை போன்று காட்டுப்பன்றி களை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்கி வனத்துறை அனு மதியுடன் கட்டுப்படுத்த உடனடி நட வடிக்கை எடுக்க வேண்டும் என் றனர்.