கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் மதிப்பீட்டுக்குழு தலைவர் க.அன்பழகன் மற்றும் உறுப்பினர்கள், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இதில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.