திருப்பூர், மார்ச் 14- இடுவாய் உள்ளிட்ட ஆறு ஊராட்சி களுக்கு பொறுப்பான திருப்பூர் ஊராட்சி ஒன்றிய பொறியாளர் மெத்த னப் போக்கால் ஊராட்சியில் மக்களுக் கான கட்டுமானப் பணிகள் நடைபெறு வதை தாமதம் செய்வதாக இடுவாய் ஊராட்சி மன்றத் தலைவர் கே. கணேசன் கூறினார். தியாகி கே.ரத்தினசாமியின் 20ஆம் ஆண்டு நினைவு தினப் பொதுக் கூட்டத் தில் பேசிய ஊராட்சிமன்றத் தலைவ ரும், கட்சியின் மாவட்டக்குழு உறுப்பி னருமான கே.கணேசன் கூறுகையில், இடுவாய் ஊராட்சியில் மார்க்சிஸ்ட் கட்சி தலைமையில் நிர்வாகம் பொறுப்பேற்று ஏறத்தாழ ஒன்றரை ஆண்டு காலத்தில் பல்வேறு பணிகள் செய்யப்பட்டுள்ளன. கொரோனா பொது முடக்க காலத்தில் பல நெருக் கடிக்கு இடையே பொது மக்களின் குடி நீர் விநியோகம் உள்ளிட்ட பணிகள் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித் தார். மேலும் அவர் கூறுகையில், ஊராட் சியில் பொறுப்புக்கு வந்தபோது பத்து பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை, இருபது நாட்களுக்கு ஒரு முறை தான் மக்களுக்கு குடிநீர் விநியோகம் நடை பெற்று வந்தது. தற்போது அதை சீர் செய்து, ஊழியர்களைப் புரிய வைத்து வாரம் ஒரு முறை என்ற அள வுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் சில சமயம் காலதாமதம் ஆகலாம். ஆனால் குடிநீர் விநியோகத்தில் பெரு மளவு முன்னேற்றம் காணப்பட்டுள் ளது.
இடுவாய் ஊராட்சி மன்ற அலுவல கம் அருகில் உள்ள பொதுக் கழிப்பிடம் மூடப்பட்டு மூன்று மாதங்கள் ஆகிறது. அங்கு பணி செய்ய மதிப்பீடு தயார் செய்து தரும்படி ஊராட்சியில் தீர்மா னம் நிறைவேற்றி ஒன்றியத்துக்கு அனுப்பப்பட்டது. ஆனால் ஒன்றியத் தில் உள்ள பொறியாளர் தேவையில் லாமல் காலதாமதம் செய்து வருகி றார். ஊராட்சி நிதியில் செய்ய வேண் டிய வேலைக்குக் கூட அவர் மதிப்பீடு தயார் செய்து கொடுத்தால்தான் உரிய அனுமதி பெற்று வேலை செய்ய முடி யும். இடுவாய் ஊராட்சிக்கு மட்டு மின்றி அவர் பொறுப்பாக உள்ள ஆறு ஊராட்சிகளுக்கும் இதேபோல்தான் எவ்வித காரணமும் இல்லாமல் கால தாமதம் செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியரி டம் நேரிலும் புகார் கூறப்பட்டுள் ளது. விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் தெரிவித்துள் ளார். ஆனால் இதே நிலை நீடித்தால் இடுவாய் ஊராட்சி மக்களைத் திரட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்த வேண் டிய நிலை ஏற்படும் என்று கே.கணே சன் எச்சரிக்கை விடுத்தார். அதேபோல் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண் ணனும், ஒன்றியச் செயலாளர் சி.மூர்த் தியும், ஊராட்சி மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகளைத் தாமதம் செய் யும் பொறியாளர் உடனடியாக உரிய மதிப்பீடு செய்து தர வேண்டும். இல்லா விட்டால் மிகப்பெரும் போராட்டம் நடத்துவோம் என்று எச்சரிக்கை விடுத் தனர்.