தருமபுரி, டிச.27- தருமபுரி அருகே விளை நிலங்களுக்குள் புகுந்து யானை கள் பயிர் சேதசத்தை ஏற்படுத்திவுள்ளன. தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் நான்கு நாட்களாக யானைகள் கூட்டம் சுற்றித் வருகின்றது. விளை நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப் படுத்தி வருவதோடு, அப்பகுதிகளில் வசித்து வரும் விவசாயி களையும் பொதுமக்களும் அச்சத்திற்கு உள்ளாகி உள்ள னர். இந்நிலையில், ஞாயிறன்று காலை தருமபுரி வன சரகத் திற்குட்பட்ட கோணங்கி அள்ளி, சின்ன பங்கு நத்தம், கவுண் டன் கொட்டாய், கூலி கொட்டாய் ஆகிய கிராமங்களில் யானை கள் சுற்றித்திரிந்தன. சோம்பட்டி கிராமத்தில் சுமார் 160 ஏக்கர் பரப்பளவில் ஒன்றிய அரசின் பவர் கிரேட் கார்ப்பரேசன் நிறு வனத்தின் நுழைவு வாயின் சுவரை உடைத்து சேதத்தை ஏற் படுத்தியது. தருமபுரி மாவட்ட வனத்துறையினர் அங்கேயே முகா மிட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட பட்டாசு வெடித் தனர். பவர்கிரிட் பகுதியில் உள்ளே நுழைந்த யானைகள் அங்கிருந்து வெளியேறி விவசாய நிலங்கள் வழியாக தரும புரி, பென்னாகரம் சாலை அருகே வந்து நின்றது. பின்னர் பாப்பிரெட்டிப்பட்டி பிக்கிலி மலை அடிவாரத்தில் யானைகள் முகாமிட்டுள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். வழி தவறி வந்த காட்டு யானைகளால் விவசாய பயிர்களை சேதப்படுத்துள்ளது. மேலும் சேதமடையாமல் தடுக்க யானை களை விரட்டும் பணியை வனத்துறையினர் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.