திருப்பூர், செப்.27- தாராபுரம், உடுமலை, காங்கேயம் ஆகிய மூன்று தாலுகாவில் மட்டும் கடந்த நான்கு மாதங்களில் 156 ஆடுகள் தெரு நாய்களால் பலியாகி உள்ளன, பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகி றது என மாவட்ட ஆட்சியர் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கூறினார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள் ளியன்று விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.மதுசூதனன் கூறுகையில், உடு மலையில் மட்டும் கடந்தாண்டில் 300க்கும் மேற்பட்ட ஆடுகள் நாய்களால் கொல்லப்பட் டுள்ளது. நகரத்தில் மட்டும் 75க்கும் மேற் பட்ட நாய்கள் குட்டி போட்டுள்ளது. ஒவ் வொரு நாயும் சுமார் 4 முதல் 7 குட்டி வரை போட்டுள்ளது. அதிகாரிகளை கேட்டால் ஏபிசி செய்து வருவதாக கூறுகின்றனர். ஆனால் நாய்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிகாரி கள் எந்த அடிப்படையில் நாய்களின் எண் ணிக்கை குறைந்துள்ளது என கூறுகி றார்கள் என்று தெரியவில்லை. பாதிக்கப் பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என் றார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன் றியச் செயலாளர் எஸ்.அப்புசாமி கூறுகை யில், தெரு நாய்களை கட்டுப்படுத்த கோரி எங்கள் சங்கம் சார்பாக 25க்கும் மேற்பட்ட மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப் பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈட்டிவீரம்பா ளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட முட்டி யங்கிணறு பகுதியில் அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் இணைக்கப்பட்ட குட்டையில் பஞ் சாயத்து நிர்வாகம் குப்பைகளை கொட்டி வரு கிறது. இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடிநீர் கடுமையாக மாசடைந்துள்ளன. மாவட்ட நிர்வாகம் இதற்கு உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதைதொடர்ந்து காங்கேயம் பகுதி விவ சாயிகள் கூறுகையில், கோழிக் கழிவுகளை தின்று பழகிய தெரு நாய்கள் ஆடுகளை வேட் டையாடி வருகிறது. இதனால் இதையே நம்பியுள்ள விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அதிகாரி களுக்கு பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாய் பிடிப்பது தொடர்பாக தகவல் அளித்தால், முறையாக வந்து நாய்களையும் பிடிப்ப தில்லை. ஆடு ஒன்றுக்கு குறைந்தது ரூ 15 ஆயி ரம் முதல் ரூ 25 ஆயிரம் வரை இழப்பு ஏற்படுகி றது. இதையே நம்பி வாழ்வாதாரம் நடத்தும் விவசாயிகளுக்கு இது மிகப்பெரும் இழப்பு. அரசு உரிய தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற னர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பதிலளிக் கையில், தாராபுரம், உடுமலை, காங்கேயம் ஆகிய மூன்று தாலுகாவில் மட்டும் கடந்த நான்கு மாதங்களில் 156 ஆடுகள் நாய்களால் பலியாகி உள்ளது. இது குறித்து அரசுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதிக் கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கு வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகி றது என்ன தெரிவித்தார். பிஏபி பாசன விவசாயிகள் கூறுகையில், உடுமலை, குண்டடம், தாராபுரம் உள்ளிட்ட பகுதியில் மக்காச்சோளம் பயிர்கள் பயிரி டப்பட்டுள்ளது. இந்நிலையில் உப்பாறு அணைக்கு தண்ணீர் திறந்து விட்டால், இடை வெளி அதிகமாகிவிடும். எனவே உப்பாறு அணைக்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது என தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து கட்சி சார்பற்ற விவசா யிகள் சங்க நிர்வாகி காளிமுத்து பேசுகை யில், உப்பாறு பகுதி விவசாயிகளுக்கு உயிர் தண்ணீர் தர வேண்டும். பிஏபி பாசன பகுதிக ளில் இந்த ஆண்டு நல்ல மழை பெய்து, போதுமான தண்ணீர் உள்ளது. இருப்பினும் தண்ணீர் தர மறுப்பது ஏற்புடையதல்ல. எனவே உப்பாறு பகுதி விவசாயிகள் பயன் பெறும் வகையில் உயிர் தண்ணீர் தர வேண்டும் என்றார்.
இதைதொடர்ந்து விவசாயிகள் பேசு கையில், பொங்கலூர் பகுதியில் தோட்டக் கலைத் துறை சார்பில் வழங்கப்பட்ட முருங்கை, பப்பாளி விதைகள் காய்க்க வில்லை. மேலும் ஐந்தாண்டு பயிரான தென் னையும் காய்க்கவில்லை. தோட்டக்கலைத் துறை முறையாக ஆய்வுகள் மேற்கொண்ட பிறகு தான் விதைகளை விவசாயிகளுக்கு வழங்கினார்களா என்பதில் சந்தேகம் ஏற்பட் டுள்ளது. அதேபோல திருப்பூர் தெற்கு பகுதி யில் தெரு நாய்களால் பலியாகிய தம்பதி யரின் குழந்தைகளின் கல்வி செலவை அரசே ஏற்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தலை மையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் க.கார்த்திகே யன், இணை இயக்குநர் (வேளாண்மை) (பொ) கிருஷ்ணவேணி, தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசன், உடுமலைப் பேட்டை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உத வியாளர் (வேளாண்மை) ஷிலா பூசாலட்சுமி, அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை இணைபதி வாளர் மீனாஅருள், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் சசிகலா, துணை ஆட்சி யர்கள் உட்பட அனைத்துத்துறை அலுவர் கள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவ சாயிகள் பலர் கலந்து கொண்டனர்.